search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bullock-carts"

    மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது

    கடலூர்:

    ராமத்தில் உள்ள வெள்ளாற்றில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அரசு அனுமதியின்றி மணல் எடுப்பதாக புகார் வந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு ஆவினங்குடி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வெள்ளாற்றில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த தொளார் கிராமத்தை சேர்ந்த பிச்சப்பிள்ளை (வயது 45), ராஜசேகரன் (45), கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் 25, கூடலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (33) ஆகிய 4 பேரும் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வரும் பொழுது கையும் கழுவுமாக பிடிபட்டனர். 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்த போலீசார் நான்கு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் சப் - இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவில் தேவராயன்பேட்டை பகுதியில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அரசு அனுமதி இன்றி 2 மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தனர்.

    2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மாட்டு வண்டி ஓட்டி வந்த கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரத்தை சேர்ந்த சுரேஷ் ( வயது -38) என்பவரை கைது செய்தனர்.தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்

    • இன்றைய நவீன கால சூழலில் உழவுத் தொழிலுக்கும், வேளாண்மை சார்ந்த போக்குவரத்துக்கும், நவீன எந்திரங்களும் வாகனங்களுமே பயன்படுத்தப்படுகிறது.
    • இதனால் கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் இருந்த கட்டை மாட்டு வண்டிகள், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.

    வாழப்பாடி:

    இன்றைய நவீன கால சூழலில் உழவுத் தொழி லுக்கும், வேளாண்மை சார்ந்த போக்குவரத்துக்கும், நவீன எந்திரங்களும் வாகனங்களுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் இருந்த கட்டை மாட்டு வண்டிகள், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. மாட்டுவண்டிகள் தற்கால குழந்தைகள் காண்பதற்கே அரிதாகி விட்டது.

    கடந்த 20 ஆண்டுகளில் அறிவியல் முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகளால் மற்ற துறைகளைப் போலவே, வேளாண்மைத் துறையிலும் நவீன கருவிகள், எந்திரங்கள் மற்றும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இதனால், ஏர் உழுதல், தண்ணீர் இரைத்தல், நாட்டு நடவு செய்தல், களையெடுத்தல், அறுவடை செய்தல், விவசாய விளை பொருட்களை ஏற்றிச் செல்லல், கதிரடித்து துாற்றி தானியங்களை பிரித்தெ டுப்பதல், வைக்கோல் சுற்றுதல் உள்ளிட்ட அனைத்து வேளாண்மை சார்ந்த பணிகளுக்கும், காளைகளையும், கட்டை மாட்டு வண்டிகளையும் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து தற்போது வழக்கொழிந்து போனது.

    குறிப்பாக, கட்டை வண்டிகளுக்கும் மாற்றாக, டிராக்டர், டெம்போ போன்ற வாகனங்களும், கதிர் அறுவடைக்கு எந்திரங்க ளுமே பயன்படுத்தப்படுகிறது.

    சமீப காலமாக, தமிழகத்தில் குக்கிரா மங்களிலும் கூட காளைகளை பூட்டி ஏர் உழவதும், கட்டை மாட்டு வண்டியில் விளை பொருட்களை ஏற்றிச் செல்வதும் பயன்பாட்டில் இல்லை. தற்கால குழந்தைகள் காண்பதற்கே கட்டை மாட்டு வண்டிகள் அரிதாகி விட்டது.

    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதி கிரா மங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிரு கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவ்வப்போது தார்சாலையில் செல்லும் மாடு பூட்டிய கட்டை வண்டிகளை தற்கால குழந்தைகள் வியப்போடு பார்த்து செல்கின்றனர்.

    இதுகுறித்து பாரம்பரிய ஆர்வலர் கலைச்செல்வி கூறியதாவது:-

    தமிழக கிராமப்புற விவசாயிகளின் பாரம்பரிய சின்னமாக கட்டை மாட்டு வண்டிகள் திகழ்ந்து வந்தன. காலத்திற்கேற்ப நவீன கருவிகள், எந்திரங்கள், வாகனங்களின் வருகை மிகவும் அவசியம் என்ற போதிலும், நமது பாரம்பரிய சின்னமான கட்டை மாட்டு வண்டிகளின் பயன்பாடு மற்றும் வாகனங்களின் பரிணாம வளர்ச்சியில் இதன் பங்கு குறித்து, தற்கால குழந்தைகள் அறிந்து கொள்வதற்காகவது, கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து மறைந்து போகாமல் காக்க வேண்டியது அவசியமாகும்.

    களைச்செடிகள், கதிர் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல், அரிசி எடுக்கப்பட்ட நெல் தவிடு, எண்ணை எடுக்கப்பட்ட பிண்ணாக்கு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொண்டு உழைக்கும் காளைகளையும், எவ்வித எரிபொருள் செலவுமின்றி போக்குவரத்துக்கு பயன்படும் கட்டை வண்டிகளையும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஆர்வமுள்ள விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊக்குவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாலை 2 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தனர் .
    • சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றார் .

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அன்றாயநல்லூர் கிராமத்தில் உள்ள கோரை ஆற்றில் அதிகாலை 2 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தனர் .

    அந்தப் பகுதியாக ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மணல் திருடர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடி விட்டனர். 2மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றார் .

    • விருத்தாசலத்தில் மணல் கடத்தய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மணிமுக்தாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ள போதும், மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மணிமுக்தாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்டுடவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 டயர் வண்டிகள் மற்றும் மாடுகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.இது குறித்து விருத்தாசலம் போலீசார் மணல் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர். #FuelPrice #Congress
    ராய்ப்பூர்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

    கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடந்த 10ம் தேதி பாரத் பந்த் போராட்டம் நடத்தியது.

    இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர்.

    ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்த சைக்கிள்களை பாதுகாவலர்கள் வாசலில் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து சட்டசபைக்குள் காங்கிரசார் கோஷமிட்டனர். இதனால் சபாநாயகர் சட்டசபையை சிறிது ஒத்திவைத்தார். #FuelPrice #Congress
    ×