search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலத்தில் மணல் கடத்தய மாட்டு வண்டிகள் பறிமுதல்
    X

    விருத்தாசலத்தில் மணல் கடத்தய மாட்டு வண்டிகள் பறிமுதல்

    • விருத்தாசலத்தில் மணல் கடத்தய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மணிமுக்தாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ள போதும், மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மணிமுக்தாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்டுடவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 டயர் வண்டிகள் மற்றும் மாடுகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.இது குறித்து விருத்தாசலம் போலீசார் மணல் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×