search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயன்பாட்டில் இருந்த சுவடே தெரியாமல் கிராமப்புறங்களிலும் காணாமல் போன கட்டை மாட்டு வண்டிகள்
    X

    வாழப்பாடியில் கம்பீரமாக சென்ற ஒற்றை காளை பூட்டிய கட்டை மாட்டு வண்டி.

    பயன்பாட்டில் இருந்த சுவடே தெரியாமல் கிராமப்புறங்களிலும் காணாமல் போன கட்டை மாட்டு வண்டிகள்

    • இன்றைய நவீன கால சூழலில் உழவுத் தொழிலுக்கும், வேளாண்மை சார்ந்த போக்குவரத்துக்கும், நவீன எந்திரங்களும் வாகனங்களுமே பயன்படுத்தப்படுகிறது.
    • இதனால் கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் இருந்த கட்டை மாட்டு வண்டிகள், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.

    வாழப்பாடி:

    இன்றைய நவீன கால சூழலில் உழவுத் தொழி லுக்கும், வேளாண்மை சார்ந்த போக்குவரத்துக்கும், நவீன எந்திரங்களும் வாகனங்களுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் இருந்த கட்டை மாட்டு வண்டிகள், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. மாட்டுவண்டிகள் தற்கால குழந்தைகள் காண்பதற்கே அரிதாகி விட்டது.

    கடந்த 20 ஆண்டுகளில் அறிவியல் முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகளால் மற்ற துறைகளைப் போலவே, வேளாண்மைத் துறையிலும் நவீன கருவிகள், எந்திரங்கள் மற்றும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இதனால், ஏர் உழுதல், தண்ணீர் இரைத்தல், நாட்டு நடவு செய்தல், களையெடுத்தல், அறுவடை செய்தல், விவசாய விளை பொருட்களை ஏற்றிச் செல்லல், கதிரடித்து துாற்றி தானியங்களை பிரித்தெ டுப்பதல், வைக்கோல் சுற்றுதல் உள்ளிட்ட அனைத்து வேளாண்மை சார்ந்த பணிகளுக்கும், காளைகளையும், கட்டை மாட்டு வண்டிகளையும் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து தற்போது வழக்கொழிந்து போனது.

    குறிப்பாக, கட்டை வண்டிகளுக்கும் மாற்றாக, டிராக்டர், டெம்போ போன்ற வாகனங்களும், கதிர் அறுவடைக்கு எந்திரங்க ளுமே பயன்படுத்தப்படுகிறது.

    சமீப காலமாக, தமிழகத்தில் குக்கிரா மங்களிலும் கூட காளைகளை பூட்டி ஏர் உழவதும், கட்டை மாட்டு வண்டியில் விளை பொருட்களை ஏற்றிச் செல்வதும் பயன்பாட்டில் இல்லை. தற்கால குழந்தைகள் காண்பதற்கே கட்டை மாட்டு வண்டிகள் அரிதாகி விட்டது.

    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதி கிரா மங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிரு கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவ்வப்போது தார்சாலையில் செல்லும் மாடு பூட்டிய கட்டை வண்டிகளை தற்கால குழந்தைகள் வியப்போடு பார்த்து செல்கின்றனர்.

    இதுகுறித்து பாரம்பரிய ஆர்வலர் கலைச்செல்வி கூறியதாவது:-

    தமிழக கிராமப்புற விவசாயிகளின் பாரம்பரிய சின்னமாக கட்டை மாட்டு வண்டிகள் திகழ்ந்து வந்தன. காலத்திற்கேற்ப நவீன கருவிகள், எந்திரங்கள், வாகனங்களின் வருகை மிகவும் அவசியம் என்ற போதிலும், நமது பாரம்பரிய சின்னமான கட்டை மாட்டு வண்டிகளின் பயன்பாடு மற்றும் வாகனங்களின் பரிணாம வளர்ச்சியில் இதன் பங்கு குறித்து, தற்கால குழந்தைகள் அறிந்து கொள்வதற்காகவது, கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து மறைந்து போகாமல் காக்க வேண்டியது அவசியமாகும்.

    களைச்செடிகள், கதிர் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல், அரிசி எடுக்கப்பட்ட நெல் தவிடு, எண்ணை எடுக்கப்பட்ட பிண்ணாக்கு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொண்டு உழைக்கும் காளைகளையும், எவ்வித எரிபொருள் செலவுமின்றி போக்குவரத்துக்கு பயன்படும் கட்டை வண்டிகளையும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஆர்வமுள்ள விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊக்குவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×