search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே அனுமதியின்றி மணல்  அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்

    • அதிகாலை 2 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தனர் .
    • சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றார் .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அன்றாயநல்லூர் கிராமத்தில் உள்ள கோரை ஆற்றில் அதிகாலை 2 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தனர் .

    அந்தப் பகுதியாக ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மணல் திருடர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடி விட்டனர். 2மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றார் .

    Next Story
    ×