search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல் விலை உயர்வால் சென்னை மாநகர பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
    X

    பெட்ரோல் விலை உயர்வால் சென்னை மாநகர பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

    • குறைந்த கட்டணம், இலவச பயணம் போன்றவற்றால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்தது.
    • ஏ.சி. பஸ்கள் முழு அளவில் தற்போது இயக்கப்படுகிறது. கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனாவிற்கு முன்பு வரை தினமும் 32 லட்சம் பயணிகள் தினமும் மாநகர பஸ்களில் பயணித்தனர்.

    கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு சரிந்தது. 10 லட்சமாக குறைந்த பயணிகள் எண்ணிக்கை பின்னர் படிப்படியாக உயரத் தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாக 25 லட்சம் வரை உயர்ந்தது. மாநகர பஸ்களில் இலவசமாக பெண்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேஜிக் வேன் போன்றவற்றில் கட்டணம் அதிகரித்தது.

    இதனால் அரசு பஸ்களை மக்கள் தற்போது நாடி வருகிறார்கள். குறைந்த கட்டணம், இலவச பயணம் போன்றவற்றால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்தது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில் மாநகர பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. கொரோனா காலத்தில் பலர் பஸ் பயணத்தை தவிர்த்து மாற்று பயணத்திற்கு மாறினார்கள். இரு சக்கரம், கார் போன்ற வாகனங்களுக்கு மாறி விட்டனர்.

    இதனால் கொரோனாவுக்கு முந்தைய பயணிகள் அளவு வரவில்லை. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பஸ் பயணத்திற்கு மக்கள் மாறி வருகிறார்கள். இன்னும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ஏ.சி. பஸ்கள் முழு அளவில் தற்போது இயக்கப்படுகிறது. கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. ஆனால் புதிதாக பேருந்துகள் வாங்கும் போது அதனை நிறைவேற்ற முடியும் என்றனர்.

    Next Story
    ×