search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    கும்பகோணத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து சங்கம் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கும்பகோணம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து சங்கம் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் கண்ணள், மாநில குழு உறுப்பினர் பார்த்தசாரதி, கவுரவ தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர்கள் கார்த்தி கேயன், ஜெயம் பிள்ளை, நகர தலைவர் அய்யப்பன், மாவட்ட செயலாளர்கள் சங்கர், ஜெயக்குமார், நகர பொருளாளர் பாண்டித்துரை உள்பட பலர் பேசினர்.

    பெட்ரோல், டீசல் மற்றும் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். நல வாரிய செயல்பாட்டை மேம்படுத்திட வேண்டும். மத்திய அரசு கொண்டு வர துடிக்கும் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் வசூல் செய்யும் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் பதிவு முறை சரி செய்யும் வரை பழைய முறையையே பின்பற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×