search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trucks strike"

    • ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
    • உடனடியாக மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    நெல்லை:

    காலாண்டு வரி உயர்வுவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். உடனடியாக மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடை பெறும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேள னம் அறிவித்தது.

    அதன்படி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தத்தை ஒட்டி நெல்லையில் வெளியூர்க ளில் இருந்து வந்த சரக்கு லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனால் அத்தியாவசிய பொருட்களின் தேவை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி யில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் டவுன், பாளை, வள்ளியூர், திசையன்விளை, அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள காலாண்டு வரியை திரும்ப பெற வேண்டும் என்று கூறி அவர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின் அழைப்பை ஏற்று நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் வருகிற 20-ந்தேதி மதுரையில் தொடங்குகிறது.
    மதுரை:

    மதுரை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சி.சாத்தையா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின் அழைப்பை ஏற்று நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் தொடங்குகிறது.

    மதுரை மாநகரில் உள்ள 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு பெற்ற சுமார் 4 ஆயிரத்து 500 லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.

    மதுரை நகரில் 230 தினசரி பார்சல் புக்கிங் செய்யும் அலுவலகங்கள் இன்றுடன் (18-ந்தேதி) புக்கிங்கை நிறுத்துகின்றன. 400-க்கும் மேற்பட்ட தேசிய உரிமம் பெற்ற லாரிகள் இன்றிலிருந்தே நிறுத்தி வருகிறோம்.

    டீசல் விலை உயர்வை குறைத்து 3 மாதத்துக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்திய 3-ம் நபர் காப்பீட்டு கட்டணத்தை வாபஸ் வாங்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்து வருடத்துக்கு ஒருமுறை சுங்க கட்டணம் செலுத்தினால் போதும் என்ற முறையை அமல்படுத்த வேண்டும்.

    இ-வே பில் போன்ற நடைமுறை சிரமங்களை நீக்க வேண்டும். தமிழக அரசு வாட் வரியை குறைக்க வேண்டும். அல்லது ஜி.எஸ்.டி. முறைக்கு மாற்ற வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறது. இதனால் மதுரையில் நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடிக்கு மேல்வர்த்தகம் பாதிக்கும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லாரி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மத்திய - மாநில அரசுகளின் வரி வசூல் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும்.

    மதுரை நகரத்திற்கு அன்றாடம் வரவேண்டிய காய்கறி, பழங்கள் மற்றும் உணவு பொருட்கள் வந்து சேராது. இதனால் விலைவாசி உயர வாய்ப்புள்ளது. வியாபாரிகளும், பொதுமக்களும் டீசல், பெட்ரோல் விலையை குறைக்க நடத்தும் எங்களது அறப்போராட்டத்துக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

    எங்களது நியாயமான கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக கவனம் செலுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கேட்டுக் கொள்கிறோம். இதுவரையில் சுமூக தீர்வுக்கான சூழ்நிலைகளை மத்திய அரசு தொடங்கவில்லை.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்த நிலையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் லாரிகள் வழக்கம் போல இயக்கப்பட்டது.
    சேலம்:

    டீசல் விலையை 3 மாதத்திற்கு ஓரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பிரதமர், பெட்ரோலிய துறை மற்றும் சாலை போக்குவரத்துதுறை மந்திரிகளுக்கு அகில இந்திய தரை வழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டது. மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ஜூன் 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    ஆனாலும் மத்திய அரசு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாததால் ஏற்கனவே அறிவித்த படி ஜூன் 18-ந் தேதியான இன்று முதல் அகில இந்திய தரை வழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் உள்ள லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இதனால் வட மாநிலங்களில் லாரிகள் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் முக்கிய சங்கமான 134 தாலுகா மற்றும் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்த தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

    இதனால் தமிழகம் முழுவதும் இந்த சங்கத்தின் கீழ் இயங்கும் நான்கரை லட்சம் லாரிகள் வழக்கம் போல ஓடின. இதில் சேலம் மாவட்டத்தில் 32 ஆயிரம் லாரிகளும் ஒடியதால் சரக்கு போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

    மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் ஜூலை மதம் 20-ந் தேதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையளர் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், 134 தாலுகா மற்றும் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்தது தான் எங்களது சங்கம். இந்த சங்கத்தின் கீழ் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு நான்கரை லட்சம் லாரிகள் இயங்குகிறது.

    இதில் மூன்றரை லட்சம் லாரிகள் தமிழகத்திற்குள் இயங்குகிறது. ஒரு லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் வழக்கம் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள மற்றொரு சங்கத்திற்கு எங்கள் ஆதரவு கிடையாது. அந்த சங்கத்தினருக்கு தமிழகத்தில் மிக குறைந்த அளவே லாரிகள் உண்டு என்பதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:

    இன்று தொடங்கியுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் எங்களது சங்கம் பங்கேற்கவில்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள 32 ஆயிரம் லாரிகளும் வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

    நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் இன்று வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால் சரக்கு போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. #tamilnews
    ×