என் மலர்
நீங்கள் தேடியது "கட்டுமான பொருள்"
- 4-வது நாளாக லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, ஓசூர், சூளகிரி, உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரிகள் உள்ளன.
இந்த கல் குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஜல்லிக்கற்கள், எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ரோபோ சாண்ட் ஆகிய கட்டுமான பொருட்கள், கட்டுமானப் பணிகளுக்காக ஓசூர் சுற்றுப்புற பகுதிகளுக்கும் அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கல்குவாரி உரிமையாளர்கள் ஜல்லிக்கற்கள் மற்றும் எம் சாண்ட்டிற்கு ஒரு டன்னுக்கு ரூ.125, ரோபோ சாண்ட்டிற்கு ஒரு டன்னுக்கு ரூ.200 மற்றும் பி சாண்ட்டிற்கு ஒரு டன்னுக்கு 225 என விலை உயர்த்தி உள்ளனர். இந்த விலை ஏற்றத்தால் பாதிப்படைந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப் பட்ட லாரி உரிமையாளர்கள் தங்களது லாரிகளை இயக்காமல் அங்கங்கே நிறுத்திவிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த பணிகளை நம்பி வாழும் லாரி ஓட்டுநர்கள், கட்டிட மேஸ்திரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஹாலோ பிளாக் கற்கள் தயார் செய்யும் தொழிலாளர்களும் பதிக்கப்பட்டுள்ளனர்.
- கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் 21-வது மாவட்ட மாநாடு நாமக்கல் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது.
- அதிகரித்து வரும் மணல், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் 21-வது மாவட்ட மாநாடு நாமக்கல் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவா் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் குமாா், மாவட்ட செயலாளா் வேலுசாமி வாழ்த்தி பேசினா். 17 போ் கொண்ட புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக
பாதுகாப்பு திட்டம்) பணியிடத்திற்கு முழு நேர அலுவலா் உடனடி யாக நியமிக்கப்பட வேண்டும். இதன்மூலம் தொழிலாளா்களுக்கு அரசு திட்டங்கள் உடனடியாக கிடைக்கும். மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்களை அமைக்கப்படும் என அரசாணை வெளியிட்டு 6 மாதங்களாகியும் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் கண்காணிப்பு குழு அமைக்கப்படவில்லை.
மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்து அதற்கான கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். அதிகரித்து வரும் மணல், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






