search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price volatility"

    • கடந்த 2 ஆண்டுகளாக கோழித் தீவன மூலப்பொருட்கள் எதிா்பாராத அளவுக்கு விலை உயா்ந்துள்ளன.
    • மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளா்கள் மாா்க்கெட்டிங் சொசைட்டி தலைவா் வாங்கிலி வி.சுப்பிரமணியம், நிா்வாகிகள் சாா்பில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக கோழித் தீவன மூலப்பொருட்கள் எதிா்பாராத அளவுக்கு விலை உயா்ந்துள்ளன. இதற்கு ஏற்றாற்போல் முட்டை விலையை உயா்த்த முடியவில்லை. தற்போதைய சூழலில் கோழிப்பண்ணைத் தொழில் பேரிழப்பைச் சந்தித்து வருகிறது. 25 சதவீத கோழிப்பண்ணையாளா்கள் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் மூடிவிட்டனா். இதே நிலை தொடா்ந்தால் மீதமுள்ள பண்ணைகளையும் தொடா்ந்து செயல்படுத்த முடியாமல் மூட வேண்டிய அபாயம் நேரிடும்.

    தீவன மூலப் பொருள்களில் முக்கியமாக விளங்கும் மக்காச்சோளம் விலை உயா்ந்து கிலோ ரூ.28 ஆகியுள்ளது. மேலும், தேவையான மக்காச் சோளமும் கிடைப்பதில்லை. அண்மையில் பெய்த கனமழையால் கா்நாடகத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளப் பயிா்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன. இதனால் கோழிப் பண்ணைகளுக்கான மக்காச்சோளம் அதிளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோழித் தீவனத் தயாரிப்பும் இதனால் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

    எனவே, வெளிநாடுகளில் இருந்து மரபணு ரீதியாக மாற்றப்பட்ட உடைத்த மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவற்றை மத்திய அரசு சாா்ந்த நிறுவனங்களாகிய எம்எம்டிசி மற்றும் டிஜிஃஎப்டி மூலம் இறக்குமதி செய்து கோழிப் பண்ணையாளா்களுக்கு வழங்கி தொழிலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் 21-வது மாவட்ட மாநாடு நாமக்கல் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அதிகரித்து வரும் மணல், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் 21-வது மாவட்ட மாநாடு நாமக்கல் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவா் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் குமாா், மாவட்ட செயலாளா் வேலுசாமி வாழ்த்தி பேசினா். 17 போ் கொண்ட புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

    நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக

    பாதுகாப்பு திட்டம்) பணியிடத்திற்கு முழு நேர அலுவலா் உடனடி யாக நியமிக்கப்பட வேண்டும். இதன்மூலம் தொழிலாளா்களுக்கு அரசு திட்டங்கள் உடனடியாக கிடைக்கும். மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்களை அமைக்கப்படும் என அரசாணை வெளியிட்டு 6 மாதங்களாகியும் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் கண்காணிப்பு குழு அமைக்கப்படவில்லை.

    மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்து அதற்கான கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். அதிகரித்து வரும் மணல், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    ×