search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்காச்சோளம் இறக்குமதிக்கு அனுமதி கேட்டு  நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள் மனு
    X

    மத்திய இணைஅமைச்சர் முருகனிடம் மனுஅளித்த கோழிப்பபண்ணையாளர்கள்.

    மக்காச்சோளம் இறக்குமதிக்கு அனுமதி கேட்டு நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள் மனு

    • கடந்த 2 ஆண்டுகளாக கோழித் தீவன மூலப்பொருட்கள் எதிா்பாராத அளவுக்கு விலை உயா்ந்துள்ளன.
    • மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளா்கள் மாா்க்கெட்டிங் சொசைட்டி தலைவா் வாங்கிலி வி.சுப்பிரமணியம், நிா்வாகிகள் சாா்பில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக கோழித் தீவன மூலப்பொருட்கள் எதிா்பாராத அளவுக்கு விலை உயா்ந்துள்ளன. இதற்கு ஏற்றாற்போல் முட்டை விலையை உயா்த்த முடியவில்லை. தற்போதைய சூழலில் கோழிப்பண்ணைத் தொழில் பேரிழப்பைச் சந்தித்து வருகிறது. 25 சதவீத கோழிப்பண்ணையாளா்கள் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் மூடிவிட்டனா். இதே நிலை தொடா்ந்தால் மீதமுள்ள பண்ணைகளையும் தொடா்ந்து செயல்படுத்த முடியாமல் மூட வேண்டிய அபாயம் நேரிடும்.

    தீவன மூலப் பொருள்களில் முக்கியமாக விளங்கும் மக்காச்சோளம் விலை உயா்ந்து கிலோ ரூ.28 ஆகியுள்ளது. மேலும், தேவையான மக்காச் சோளமும் கிடைப்பதில்லை. அண்மையில் பெய்த கனமழையால் கா்நாடகத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளப் பயிா்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன. இதனால் கோழிப் பண்ணைகளுக்கான மக்காச்சோளம் அதிளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோழித் தீவனத் தயாரிப்பும் இதனால் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

    எனவே, வெளிநாடுகளில் இருந்து மரபணு ரீதியாக மாற்றப்பட்ட உடைத்த மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவற்றை மத்திய அரசு சாா்ந்த நிறுவனங்களாகிய எம்எம்டிசி மற்றும் டிஜிஃஎப்டி மூலம் இறக்குமதி செய்து கோழிப் பண்ணையாளா்களுக்கு வழங்கி தொழிலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×