என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராமநாதபுரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராமநாதபுரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்:

    பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்களை சுட்டுக்கொன்ற தமிழக அரசை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தெய் வேந்திரன் தலைமையில் அரண்மனை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் செல்லதுரை அப்துல்லா,பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர் காங்கிரஸ் தலைவர் கோபி வரவேற்றார். நகர் காங்கிரஸ் தலைவர்கள் ராஜாமணி, அஜீஸ், வட்டார தலைவர்கள் ஜோதிபாலன், கோபால், ஜெயபாண்டி, சேதுபாண்டியன், கந்தசாமி, முனீஸ்வரன், தன சேகரன், விஜயரூபன், ஜேசு மனோ கரன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகுந் தலாதேவி, பெமிளா விஜய குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகா லிங்கம், முத்து ராமலிங்கம், பாலகிருஷ்ணன், இலக்கிய அணி மாவட்ட தலைவர் முருகேசன், ரவி, காமராஜ், விஜயன், அருள், கந்தப்பழம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×