என் மலர்
நீங்கள் தேடியது "Government Officer"
- தொழில் மையத்தில் உதவி பொறியாளராக ராமகிருஷ்ணசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
- தற்போது, ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக ராமகிருஷ்ணசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் (யு.பி.எஸ்.சி) தேர்வு எழுதினார்.
தற்போது, ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் அவர் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 117-வது இடம் பிடித்துள்ளார். தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து ராமகிருஷ்ண சாமி கூறியதாவது:-
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் எனது சொந்த ஊர். தந்தை ரங்கராஜ். தாய் தனலட்சுமி. கடந்த 2016-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.இ., மெக்கானிக்கல் படித்து முடித்தேன். தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்தேன்.
எனினும், படிக்கும் காலத்தில் இருந்தே யு.பி.எஸ்.சி தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது. எனவே யு.பி.எஸ்.சி தேர்வுக்கும் தயாராகி வந்தேன்.
யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயார் செய்யும் சமயத்தில், கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்திய உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன்.
அதன் அடிப்படையில், தற்போது நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். அரசுப் பணி கிடைத்தாலும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதே எனது குறிக்கோள். எனவே தொடர்ந்து அதற்காக பயிற்சி எடுத்து வந்தேன்.
ஏற்கனவே 2 முறை நேர்முகத்தேர்வு வரை சென்று தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால் அந்த அனுபவத்தை வைத்து இந்த ஆண்டு மிகவும் கவனமாக படித்து தேர்வு எழுதினேன். தற்போது 3-வது முயற்சியில், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று, அகில இந்திய அளவில் 117 இடத்தைப் பிடித்துள்ளேன். தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .
தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.
தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .
ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசு அலுவலகம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுகிழமை அத்தியாவசிய பணிக்காக பெண் ஊழியர் ஒருவர் பணிக்கு வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று அலுவலகத்தில் மற்ற பணியாளர்கள் யாரும் இல்லை. அந்த பெண் ஊழியரும் அவரது மேல் அதிகாரியும் மற்றும் சிலரும் மட்டுமே இருந்தனர்.
அப்போது மேல் அதிகாரி, அந்த பெண் ஊழியரை அவரது அறைக்கு அழைத்து அவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இது பற்றி நேற்று அந்த பெண் ஊழியர் கலெக்டர் அலுவலக உயர் அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார். இதையடுத்து பெண் ஊழியர் புகார் கூறிய அதிகாரியை அழைத்து உயர் அதிகாரி நேற்று விசாரணை நடத்தினார்.
அப்போது அந்த அதிகாரி தன் மீது வேண்டுமென்றே பெண் ஊழியர் புகார் கூறுவதாகவும், தனக்கும் இப்பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மறுத்தார்.
எனவே இப்பிரச்சினை குறித்து விரிவான விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக புகார் கொடுத்தவர் மற்றும் புகார் கூறப்பட்டவர் ஆகிய இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரிக்க ஏற்பாடு நடந்தது.
இந்நிலையில் பெண் ஊழியருக்கு ஆதரவாக அலுவலக ஊழியர்கள் இப்பிரச்சினையை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் இப்பிரச்சினை குறித்து நேரில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். இதனால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.






