search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalki avatar"

    குஜராத் மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர், தான் கல்கி அவதாரம் என்றும், வேலைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KalkiAvatar #GujaratOfficer
    அகமதாபாத்:
     
    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணைத் திட்ட நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளராக வேலை செய்து வருபவர் ரமேஷ்சந்திரா பெபார். இவர் கடந்த சில மாதங்களாக சரியாக அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தாலும் தாமதமாகவே வருவாராம். இதனால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் ரமேஷ்சந்திரா செய்தியாளர்களிடம் கூறிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2 பக்க விளக்க அறிக்கையை வெளியிட்டு அவர் கூறியதாவது:

    நீங்கள் நம்பினால் நம்புங்கள். நான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கருதப்படும் கல்கி அவதாரம். நான் வீட்டில் இருந்து தவம் செய்து வருகிறேன். என்னுடைய தவத்தின் பயனால் கடந்த சில ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருகிறது.

    கடந்த 2010ம் ஆண்டில் தான் நான் கடவுள் அவதாரம் என்பதை உணர்ந்தேன். அப்போது முதல் எனக்கு அதீத சக்திகள் கிடைத்து வந்தன.

    நான் கடவுள் அவதாரம் என்பதால் வேலைக்கு வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னால் ஆபீசில் உடகார்ந்து தவம் செய்ய முடியவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    கடந்த 8 மாதங்களில் ரமேஷ்சந்திரா அலுவலகத்துக்கு 16 நாட்கள் மட்டுமே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #KalkiAvatar #GujaratOfficer
    ×