search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை
    X

    பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் முருகப்பெருமான், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் இருந்தபோது

    எடுத்த படம்.

    சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை

    • பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் உள்ள முருகப்பெருமானுக்கு பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் உள்ள முருகப்பெருமானுக்கு பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரு மஞ்சனம், பஞ்சாமிர்தம் ,விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெரு மானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவில் சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவில் ராஜா சுவாமி, கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×