யூனியன் கவுன்சில் கூட்டம்

யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.முடிவில் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் நன்றி கூறினார்.
யூனியன் கவுன்சில் கூட்டம்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் ராஜ வேணி, ஆணையாளர் செந்தாமரை செல்வி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவா தங்கள் வரு மாறு:- கவுன்சி லர் ராஜ்குமார்:-வெண்ணத்தூர் ஊராட்சி முத்த ரவு நாதபுரம் கிராம கண்மா யில் தேவி பட்டி னம் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கண்மாயில் கொட்டாமல் மாற்று இடம் தேர்வு செய்து குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் மனோ கரன்:-கலெக்டர் அலுவலக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பேராவூர் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதி மக்கள் பாதிப்படை கின்றனர். எனவே அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். ஆணை யாளர்:- கவுன்சிலர்கள் தெரிவித்த குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் உலக ராணி, சீனி இப்ராஹிம் அம்மாள், மாணிக்க சாரதி, கல்பனா தேவி, பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com