என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுகர்வோர் ஆணையம்"

    • வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 50 பணம் ரொக்கமாக வழங்கப்படாமல், "ராப்பிடோ காயின்களாக" கொடுக்கப்படுகிறது.
    • வாடிக்கையாளர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ரூ. 50-ஐ முழுமையாகத் திருப்பித் தரவும் CCPA உத்தரவிட்டுள்ளது.

    நாடு முழுவதும் பெரு நகரங்களில் ரப்பிடோ (Rapido) நிறுவனம் பைக் டாக்சி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் "5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ. 50 கேஷ்பேக்" மற்றும் ""Guaranteed ஆட்டோ" போன்ற வாசகங்களைக் கொண்டு வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 50 பணம் ரொக்கமாக வழங்கப்படாமல், "ராப்பிடோ காயின்களாக" கொடுக்கப்படுகிறது.

    ராப்பிடோ காயின்கள் ஏழு நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், குறிப்பிட்ட பைக் சவாரிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதால் அதன் மதிப்பு குறைகிறது.

    இந்த விளம்பரங்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இதனால், ஜூன் 2024 முதல் ஜூலை 2025 வரை ரப்பிடோ நிறுவனம் 1,200-க்கும் மேற்பட்ட நுகர்வோர் புகார்களைப் பெற்றுள்ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட புகார்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.

    இந்நிலையில் கேஷ்பேக் பலன்களை வழங்குவதாகக் கூறி தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக அந்நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), ரப்பிடோ (Rapido) நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    அபராதத்துடன் சேர்த்து, தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்தவும், பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ரூ. 50-ஐ முழுமையாகத் திருப்பித் தரவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • இந்த புகாரை டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர் தீர்வு ஆணையம் விசாரித்தது.
    • மேலும் வழக்குச் செலவாக ரூ.25,000 செலுத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    பயணி ஒருவருக்கு அழுக்கான கறை படிந்த இருக்கையை வழங்கியதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி பாகுவிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் போது அழுக்கு மற்றும் கறை படிந்த இருக்கை வழங்கப்பட்டதாகக் கூறி பிங்கி என்ற பெண் புகார் அளித்தார்.

    இந்த புகாரை டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர் தீர்வு ஆணையம் விசாரித்தது.

    இந்நிலையில், குறைபாடுள்ள சேவையால் பயணிக்கு ஏற்பட்ட சிரமம் மற்றும் மன வேதனைக்கு இழப்பீடாக ரூ.1.5 லட்சம் வழங்க விமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்குச் செலவாக ரூ.25,000 செலுத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • ரூ.10 ஆயிரம் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, ரூ.50 ஆயிரம் இழப்பீடு.
    • நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவு

    2023ல் சென்னை ஈசிஆரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆக.12ல் மீண்டும் நடந்த நிகழ்ச்சிக்கு முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை என்றும் ரூ.10,000 டிக்கெட் எடுத்தும் வாகன நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாததால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தும், நிகழ்ச்சியை பார்க்க முடியாதவருக்கு இழப்பீடு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ரூ.10 ஆயிரம் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், வழக்கு செலவாக ரூ.5,000 வழங்க ஏசிடிசி நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர்.
    • சோதனையில் காரில் ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 இருந்தது. அதற்கு முறையான ஆவணம் இல்லை.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பவன்குமார் கிரியப்பனவர் மேற்பார்வையில் திருப்பூர், காங்கயம் ரோடு புதுப்பாளையம் தனியார் பள்ளி அருகே துணை மாநில வரி அலுவலர் திருமால் செல்வன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக காரில் வந்த நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர்.

    சோதனையில் காரில் ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 இருந்தது. அதற்கு முறையான ஆவணம் இல்லை. இதனால் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் (தேர்தல் கணக்கு) தங்க வேல்ராஜனிடம் ஒப்படைத்தனர். அவர் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    • உள்ளூர் டாக்ஸியை பிடித்து விமான நிலையத்தை அடைந்த உபேந்திர சிங்கும் அவரது மனைவியும் விமானத்தை தவறவிட்டனர்.
    • டெல்லி நுகர்வோர் ஆணையத்தில் முறையான புகார் ஒன்றை அளித்தார்.

    சரியான நேரத்தில் வாகனத்தை (cab) வழங்கத் தவறியதற்காக ஊபர் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு பயனர் தனது விமானத்தை தவறவிட்டார். நிதி இழப்புகள், சிரமம் மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றிற்காக ரூ.54,000 இழப்பீடாக வழங்க ஊபர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    டெல்லியில் வசிக்கும் உபேந்திர சிங், கடந்த 2022-ம் ஆண்டு இந்தூருக்கு விமானத்தைப் பிடிக்க அதிகாலை 3:15 மணிக்கு ஊபர் வண்டியை முன்பதிவு செய்தார். வண்டி சரியான நேரத்திற்கு வரவில்லை. இதனால் உபேந்திர சிங் ஊபர்-ஐ தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதிலும், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    உள்ளூர் டாக்ஸியை பிடித்து விமான நிலையத்தை அடைந்த உபேந்திர சிங்கும் அவரது மனைவியும் விமானத்தை தவறவிட்டனர்.

    ஊபர் சேவை தோல்வியால் விரக்தியடைந்த சிங், ஊபர் நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.

    பின்னர் உபேந்திர சிங் ஊபரின் சேவையில் குறைபாடு எனக் கூறி, டெல்லி நுகர்வோர் ஆணையத்தில் முறையான புகார் ஒன்றை அளித்தார்.

    நுகர்வோர் ஆணையம் உபேந்திர சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, ஊபர் நிறுவனத்தை பொறுப்பேற்க வைத்தது.

    உபேந்திர சிங்கிற்கு ரூ.54,000 இழப்பீடு வழங்குமாறு ஊபர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    நிதி இழப்பு மற்றும் சிரமத்திற்கு ரூ.24,100, மன உளைச்சல் மற்றும் சட்டச் செலவுகளுக்கு ரூ.30,000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அதிக வட்டியைச் சுமத்தும் நடைமுறை நியாயமற்றது என NCDRC தெரிவித்தது.
    • வங்கிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உச்சநீதிமன்றம் NCDRC தீர்ப்பை ரத்து செய்தது.

    தாமதமாக கிரெடிட் கார்டு கட்டண பரிவர்த்தனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 30% வட்டி விகித வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கி உள்ளது. தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் (NCDRC) கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த 30% வட்டி விகித வரம்பை நிர்ணயித்துத் தீர்ப்பளித்திருந்த நிலையில் அதை எதிர்த்து வங்கிகள் தொடர்ந்த வழக்குகள் வெகு காலமாக நடைபெற்று வந்தது.

    வங்கிகள் தாமதமாக கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவோர் மீது அதிக வட்டியைச் சுமத்தும் நடைமுறை நியாயமற்றது என்று கூறி NCDRC 30% க்கு மேல் வட்டி கூடாது என்ற வட்டி வரம்பை நிர்ணயித்தது. இந்த நிலையில் அந்த வரம்பை நீக்கி உச்சநீதிமன்றம் தற்போது இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

     

    நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி, சிட்டி வங்கி, ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி கார்ப்பரேஷன் (எச்எஸ்பிசி) உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து வந்த நிலையில் NCDRC தீர்ப்பை ரத்து செய்தது. அதன்படி இனிமேல் வங்கிகள் தாமதமாக கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவோர் மீது 30 சதவீதத்துக்கு மேலும் தாங்கள் விரும்பியபடி வட்டியை சுமத்தலாம்.  

    ×