search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cashback"

    பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூபே கார்டு, பீம் செயலி யு.எஸ்.எஸ்.டி. மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு கேஷ் பேக் சலுகை அளிக்கும் திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. #GST
    புதுடெல்லி:

    இந்தியாவில் அமலில் இருந்து வந்த பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டுவரப்பட்டது. இந்த புதிய வரிவிதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. பொருட்கள் மற்றும் சேவைகள் மீது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 விகிதங்களில் இந்த வரி விதிக்கப்படுகிறது.

    அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்படுவது இல்லை. மேலும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மதுபானங்கள் சரக்கு சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. அவற்றுக்கு தனியாக வரி விதிக்கப்படுகிறது.

    சரக்கு சேவை வரி தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய மத்திய நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மாநில நிதி மந்திரிகள் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளனர். இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்த கவுன்சில் எடுத்த முடிவின்படி, பல்வேறு பொருட்களின் மீதான சரக்கு சேவை வரி அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. பல பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 29-வது கூட்டம், மத்திய நிதி மந்திரி (பொறுப்பு) பியூஷ் கோயல் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பல்வேறு மாநிலங்களின் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் பியூஷ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மின்னணு மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தலைமையிலான மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. அதன்படி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ரூபே கார்டு மற்றும் பீம் செயலி, யு.எஸ்.எஸ்.டி. மூலம் பணம் செலுத்தினால் மொத்த ஜி.எஸ்.டி.யில் 20 சதவீதம் கழிவு (கேஷ் பேக்) வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வரிக்கழிவு அதிகபட்சம் ரூ.100 ஆக இருக்கும். பரீட்சார்த்த அடிப்படையில் சில மாநில அரசுகள் தாமாக முன்வந்து இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இந்த திட்டத்துக்கு நல்ல பலன் இருந்தால் மாநிலங்கள் தொடர்ந்து இதை செயல் படுத்தலாம், இல்லையேல் கைவிட்டுவிடலாம். இது மாநிலங்களின் விருப்பத்தை பொறுத்தது.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்ய நிதி இலாகா ராஜாங்க மந்திரி சிவ பிரசாத் சுக்லா தலைமையில் துணைக்குழு ஒன்று அமைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த குழுவில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, பீகார் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி மற்றும் பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களின் நிதி மந்திரிகள் இடம்பெறுவார்கள்.

    நிறைய பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கவேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ஐடியா செல்லுலார் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ் சலுகைகளில் குறிப்பிட்ட தொகை கேஷ்பேக் வடிவில் திரும்ப வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஐடியா செல்லுலார் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு கேஷ்பேக் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கூப்பன் வடிவில் வழங்கப்படும் இந்த தொகையை கொண்டு ரூ.199 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த சலுகையை பெற அனைத்து ரீசார்ஜ்களும் மை ஐடியா செயலி அல்லது ஐடியா வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இத்துடன் ஐடியா அறிவித்திருக்கும் மற்றொரு திட்டத்தில் அன்லிமிட்டெட் ரீசார்ஜ் செய்யும் போது பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கார்கள், பைக்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வென்றிட முடியும். ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள ஐடியா அறிவித்திருக்கும் புதிய வழிமுறையாக இது பார்க்கப்படுகிறது.

    ஜூன் 5 முதல் ஆகஸ்டு 15-ம் தேதி வரை ஐடியா செயலி அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் கூப்பன் வழங்கப்படுகிறது. இந்த கூப்பனை ரூ.199 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    ரூ.199 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஐடியா பிரீபெயிட் ரூ.398 சலுகையில் முந்தைய ரூ.199 சலுகையில் வழங்கப்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. எனினும் ரூ.398 சலுகையில் 70 நாட்கள் வேலிடிட்டியும், ரூ.199 சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஹாலிடே ஹங்காமா என்ற பெயரில் இதே போன்ற சலுகையை அறிவித்தது. இதில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.50 கேஷ்பேக் வழங்கப்பட்டது.
    ×