என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூரில் 12-ந்தேதி நடக்கிறது
    X

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூரில் 12-ந்தேதி நடக்கிறது

    • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. மண்டல வைப்பு நிதி ஆணையாளர்-2 சிசுபாலன் தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்களது குறைகளை அது குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர்-2 சிசுபாலன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×