search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு
    X

    காட்பாடி அருகே உள்ள காசிகுட்டை கிராமத்தை ேசர்ந்த பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

    செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

    • குறைதீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் மனு
    • வேலூரில் லாட்டரி விற்பனையை தடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி மாவட்ட பொது செயலாளர் சரவணன் தலைமையில் மனு அளித்தனர்.

    அதில் வேலூர் டவுன் சத்துவாச்சாரி, பழைய பஸ் நிலையம், காகிதப்பட்டறை, நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை நடக்கிறது.

    கூலி தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் லாட்டரி வாங்கி பணத்தை இழக்கின்றனர். இதனால் கூலி தொழிலாளர் வாழ்வாதாரம் கெடுகிறது. லாட்டரி விற்பனை சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து ஏழை குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

    குடியாத்தம் அருகே உள்ள பரதராமி இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மனு அளித்தனர்.

    அதில் பரதராமி இந்திரா நகரில் நத்தம் நிலம் உள்ளது. இந்த இடத்தை மாடி வீடு உள்ளவர்களும் அரசாங்கத்தில் வேலை செய்பவர்களும் இலவச பட்டா வாங்கியதாக கூறி ஆக்கிரமிப்பு செய்ய பார்க்கிறார்கள். இதில் தீர விசாரித்து அந்த இடத்தை அங்கன்வாடி மையம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    இதேபோல் காட்பாடி அருகே உள்ள காசிகுட்டை கிராமத்தை ேசர்ந்த பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

    Next Story
    ×