search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
    X

    மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

    • மதுரை தெற்கு கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தெற்கு கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை (15-ந் தேதி) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார்.

    இந்த கோட்டத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மீனாட்சி அம்மன் கோவில், மாகாளிப்பட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள் குறைகளை நேரில் அல்லது மனுக்கள் மூலமாகவோ மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்கலாம். ேமற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×