search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு
    X

    கோப்புபடம்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு

    • திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.
    • 48 சதவீத வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பு பணி கடந்த ஆகஸ்டு மாதம் துவங்கி நடைபெற்றுவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்ட சபை தொகுதிகளில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.மாவட்ட மொத்த வாக்காளர்களில் 48 சதவீத வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் ஆதார் இணைப்பில் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்தநிலையில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.8 தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பில் பின்தங்கிய பகுதிகளைச்சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட ஆதார் இணைப்பு விகிதத்தை உயர்த்தவேண்டும் என ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில்டி.ஆர்.ஓ., ஜெய்பீம், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×