search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tatkal"

    • தட்கல் முறையில் விதிக்கப்படும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.
    • கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் இன்று மாநிலத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.

    பொதுச் செயலாளர் ராஜா வரவேற்றார். பொருளாளர் பொன்னுச்சாமி, இளைஞரணி தலைவர் ஜெயபாலன் , மாநில அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு தலைவர் தங்கராஜ், கௌரவ ஆலோசகர் சக்திவேல், உஜ்ஜையினி மாகாளியம்மன் திருப்பணிக்குழு செயலாளார் துரையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் 2023-ம் ஆண்டிற்கான சிறப்பு மலரின் முதல் பிரதியை வணிகப்பூஷனம் டாக்டர் வெள்ளைச்சாமி நாடார் வெளியிட மாநில அமைப்பு தலைவர் கணேசன் பெற்றுக்கொண்டார்.

    இதையடுத்து சேலம் நகர அனைத்து வணிகர் சங்கம் பொதுச் செயலாளர் ஜெயசீலன் சிறப்புரையாற்றினார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தீர்மானங்கள் விளக்க உரையாற்றினார்.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் வருகிற டிச ம்பர் மாதம் சுதேசி, தொழில் பாதுகாப்பு மாநாடு நடத்த வேண்டும். அதில் கலந்து கொள்ள அரசியல் கட்சி தலைவர்களை அழைக்க வேண்டும். விதேசிகளை வளர்த்திடவும், சுதேசிகளை அழித்திடவும் முனைப்புடன் செயல்படும் தேச விரோத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . மின் கட்டணம் உயர்வை குறைத்திட வேண்டும். தக்கல் முறையில் விதிக்கப்படும் மின் கட்டண உயர்வினை கைவிட வேண்டும் . ஒருங்கிணைந்த தென் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் . கடைகளில் மாமூல் கேட்பதும், மறுக்கும் கடை உரிமையாளர்களை தாக்குவதுமான செயலுக்கு கடை உரிமையாளர்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் சமூக விரோதிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து அந்நிய முதலீடு ஆன்லைன் வியாபாரத்தை தவிர்ப்போம். உள்ளூர் வியாபாரிகளை ஊக்குவிப்போம். நம் கடைகளில் பொருட்களை வாங்குவோம் என்று வலியுறுத்தப்பட்டன.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் துரையரசன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நள்ளிரவிலேயே காத்து கிடக்கிறார்கள்.
    • நிமிடத்துக்கு நிமிடம் மீட்டர் வட்டி போல் கட்டணம் எகிறி கொண்டிருக்கும்.

    சென்னை:

    தொலைதூர இடங்களுக்கு செல்பவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள். அதற்கு காரணம் பாதுகாப்பு, கட்டணம் குறைவு, சொகுசான பயணம் என்பதுதான்.

    3 மாதங்களுக்கு முன்பே ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் எல்லோராலும் 3 மாதங்களுக்கு முன்பே பயண திட்டம் போட முடியாது.

    இதனால் குறுகிய காலத்தில் திட்டமிட்டு செல்பவர்கள், அவசர பயணம் மேற் கொள்பவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.

    அவர்கள் கடைசி முயற்சியாக தட்கல் முறையில் முன்பதிவை தேடி செல்கிறார்கள். இந்த தட்கல் முன்பதிவு ஒருநாள் முன்பு நடைபெறுகிறது. அதுவும் காலை 10 மணிக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கும், 11 மணிக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கும் தொடங்குகிறது. முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.

    தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நள்ளிரவிலேயே காத்து கிடக்கிறார்கள்.

    இணைய தளங்களை கையாள்பவர்கள் வீடுகளில் இருந்தே டிக்கெட் எடுக்கிறார்கள். இந்த வசதி இல்லாதவர்கள் இணைய தள சேவை மையங்களை அணுகுகிறார்கள்.

    கடந்த சில நாட்களாக தட்கல் முன்பதிவுக்கு இணையதளத்தில் உள்ளே நுழைந்து ரெயிலை தேர்வு செய்து, பயணிகள் விவரங்களையும் பதிவு செய்துவிட்ட 'கேப்சா' என்ற குறியீட்டு எண்ணை பதிவு செய்ததும் உள்ளே செல்லாமல் முடங்கி விடுகிறது.

    அடுத்த சில நிமிடங்களில் பிரீமியம் தட்கலுக்கு முயன்றால் ஒழுங்காக செயல்படுகிறது. பிரீமியம் தட்கல் என்பது இரண்டு மடங்கு அதிகம். மேலும் நிமிடத்துக்கு நிமிடம் மீட்டர் வட்டி போல் கட்டணம் எகிறி கொண்டிருக்கும்.

    உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு தட்கல் கட்டணம் ரூ.600 மட்டுமே. ஆனால் பிரிமீயம் தட்கல் கட்டணம் ரூ.1000-க்கு மேல். ஒரு டிக்கெட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் 1000 வரை ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

    இதற்காகவே தட்கல் முன்பதிவில் தில்லாலங்கடி வேலைகளை ரெயில்வே நிர்வாகம் செய்வதாக பயணிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் ரெயிலவே அதிகாரிகளிடம் கேட்டால் ஒரே நேரத்தில் ஏராளமானோர் இந்த தளத்தை உபயோகப்படுத்துவதால் முடங்குகிறது. என்று சொல்லி எளிதில் தப்பி விடுகிறார்கள். அப்படியானால் பிரீமியம் தட்கலுக்கு மட்டும் எப்படி முடங்காமல் செயல்படுகிறது என்றால் பதில் சொல்ல யோசிக்கிறார்கள். தட்கல் முன்பதிவு தொடங்கும் போது தடங்கல் இல்லாமல் சேவையை வழங்குவதுதான் ரெயில்வேயின் கடமை.

    ×