search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாலை கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
    X

    உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

    சாலை கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

    • புதிதாக கோவில் கட்ட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.
    • நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் புதுக்காலனியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.

    அந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் கட்ட கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.

    தற்போது பழைய கோவிலை இடித்து விட்டு புதியதாக கோவில் கட்டுவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் புதிய கோவில் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் கோவில் கட்டும் பணியில் இடையூறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோவில் கட்டுவதற்கு சாலை வசதி இல்லாததை கண்டித்து கரியமாணிக்கம் புதுகாலனி மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கரியமாணிக்கம்-புதுவை செல்லும் மெயின் ரோட்டில் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இந்த பிரச்சினையில் தொகுதி எம்.எல்.ஏ.வான துணை சபாநாயகர் ராஜவேலு தலையிட்டு கோவிலுக்கு செல்ல சாலையை உருவாக்கி தரும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×