search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm naveen patnaik"

    ஒடிசாவின் பலசோர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி நவீன் பட்நாயக், என் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #NaveenPatnaik #PMModi
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பலசோர் பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் வீட்டுக்கு சென்ற பின்னரே நான் ஒடிசாவுக்கு வருவேன் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஒடிசாவின் பலசோர் பாராளுமன்ற தொகுதியில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:



    ஒடிசாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சியை பார்வையிட பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை. அதை பார்வையிட அவருக்கு நேரமும் இல்லை.

    நடைபெற்று முடிந்த மூன்று கட்ட பாராளுமன்ற தேர்தலின் நிலவரத்தை வைத்துப் பார்த்தால், மே 23ம் தேதிக்கு பிறகு நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள். எனவே, நான் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என கிண்டலாக தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #NaveenPatnaik #PMModi
    ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.



    முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர். நவீன் பட்நாயக்கிடம் இருந்த கைப்பைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    ஒடிசாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #OdishaBoatTragedy #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மாவட்டத்தில் உள்ள ஹசினா மற்றும் கண்ட்கிபூர் கிராமங்களில் இருந்து சுமார் 19 குடும்பத்தினர் புத்தாண்டை கொண்டாட ஹுகிடோலா தீவுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்ற படகில் 6 ஆன்கள், 27 பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் பயணம் செய்தனர்.

    மகாநதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு நிலைதடுமாறியது. இதில்  படகு நிலை தடுமாறி ஆற்றில் கவிழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும்  நீரில் மூழ்கினர்.

    தகவலறிந்து கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் உள்ளூர் மீனவர்களும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 45 பேரை உயிருடன் மீட்டனர். 



    இந்நிலையில், இன்று அதிகாலை ஆற்றில் இருந்து 9 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும், காணாமல் போன ஒருவரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    படகு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்தார். விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றார்.
    #OdishaBoatTragedy #NaveenPatnaik
    ஒடிசா மாநில சட்டசபையில் விவசாயிகள் நலனுக்காக ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. #OdishaCabinet #NaveenPatnaik #KALIAscheme
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபையில் விவசாயிகள் நலனுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காலியா திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ஒடிசா மாநில சட்டசபையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. காலியா திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தினால் ஒடிசாவில் உள்ள 32 லட்சம் விவசாயிகளில் 92 சதவீதம் பேர் பலனடைவார்கள். விவசாயிகளின் வறுமையைப் போக்கும் விதமாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    காலியா திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகள் தாங்கள் வாங்கிய வங்கி கடன்களை அடைக்க முடியும். இந்த திட்டம் விவசாயிகளுக்கு ஆதரவானது மட்டுமின்றி நிலமற்றவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெறமுடியும் என தெரிவித்தார். #OdishaCabinet #NaveenPatnaik #KALIAscheme
    ஒடிசா மாநிலத்தில் கார் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும் என அம்மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் தெரிவித்துள்ளார். #Accident #Odisha #NaveenPatnaik
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் இருந்து பட்ராபூர் பகுதிக்கு இறந்த உறவினரின் அஸ்தியை கரைப்பதற்காக காரில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது தீடிரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த கால்வாயில் விழுந்து மூழ்கியது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படகு மூலம் நடந்த மீட்பு நடவடிக்கையின் மூலம் ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டனர். 2 குழந்தைகள் உடபட 5 பேர் இந்த விபத்தில் பலியாகினர்.



    இந்த விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட அம்மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Accident #Odisha #NaveenPatnaik
    ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை டுடீ சந்துக்கு ரூ.3 கோடிக்கான காசோலையை ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் இன்று வழங்கினார். #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik


    புவனேஸ்வர்:

     
    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.

    ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த மாநில அரசுகளால் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை டுடீ சந்த், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது அபார திறமை மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு ஊக்கத்தொகையாக ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

    இதைத்தொடர்ந்து, டுடீ சந்த் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி பதக்கம் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்தார். இவரது இந்த திறமையை பாராட்டும் வகையில், முதல்மந்திரி நவீன் பட்னாயக் கூடுதலாக 1.5 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்நிலையில், இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா திரும்பிய டுடீ சந்துக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் ரூ.3 கோடிக்கான காசோலையை இன்று வழங்கினார் #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik
    ஆசிய விளையாட்டு போட்டியில் மேலும் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்ற தடகள வீராங்கனை டுடீ சந்துக்கு தற்போது கூடுதலாக 1.5 கோடி ரூபாய் அளிக்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik
    புவனேஸ்வர்:

    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.

    ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த மாநில அரசுகளால் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை டுடீ சந்த், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது அபார திறமை மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு ஊக்கத்தொகையாக ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.



    இதைத்தொடர்ந்து, டுடீ சந்த் தற்போது பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி பதக்கம் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்துள்ளார். இவரது இந்த திறமையை பாராட்டும் வகையில், முதல்மந்திரி நவீன் பட்னாயக் கூடுதலாக 1.5 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம், டுடீ சந்த் 3 கோடி ரூபாய் ஊக்கத்தொகை பெற உள்ளார். #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik
    ஒடிஷா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கார் மீது அழுகிய தக்காளிகளை வீசிய காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். #CMNaveenPatnaik

    பூரி:

    ஒடிஷா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    முதல்-மந்திரி பட்நாயக் பூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார்.

    பூரி, கோனார்க் தேசிய நெடுஞ்சாலையில் முதல்- மந்திரி கார் சென்றபோது காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டு நவீன் பட்நாயக்குக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். அதோடு கருப்புக் கொடியும் காட்டினார்கள்.

    சில காங்கிரஸ் தொண்டர்கள் முதல்-மந்திரி கார் மீது அழுகிய தக்காளிகளை வீசினார்கள். இதை நவீன் பட்நாயக்கும், அதிகாரிகளும் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பில் உள்ள குறைபாடே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்-மந்திரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பஞ்சாபில் ஏற்பட்ட இந்த குளறுபடி குறித்து டி.ஜி.பி. சர்மா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நவீன் பட்நாயக் கார் மீது தக்காளிகளை வீசிய காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். #CMNaveenPatnaik

    ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக்கின் முயற்சியை முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டியுள்ளார். #NaveenPatnaik #Hockey #DilipTirkey
    புவனேஷ்வர்:

    இந்தியாவின் தேசிய விளையாட்டாக அனைவராலும் அறியப்படுவது ஹாக்கியாகும். ஆனால் அதற்கான அறிவிப்புகள் இதுவரையில் அரசு இதழில் வெளியிடப்படவில்லை.

    இதற்கிடையே, ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், அடுத்த ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் வருகிற நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ளது. ஹாக்கி விளையாட்டை தேசிய விளையாட்டு என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது அறிந்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஹாக்கி ரசிகர்கள் மனநிலையை புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். இந்தியாவை உலகளவில் பெருமைப்பட செய்த ஹாக்கி வீரர்களுக்கு அது ஒரு சிறந்த மரியாதையாக இருக்கும் என கூறியுள்ளார்.



    இந்நிலையில், ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக்கின் முயற்சியை முன்னாள் ஹாக்கி கேப்டன் திலிப் திர்கே பாராட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒடிசா முதல் மந்திரியின் முயற்சிக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கியில் தான் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது, எனவே கட்டாயம் ஹாக்கியை பிரபலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். #NaveenPatnaik #Hockey #DilipTirkey
    ×