என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் மட்டும் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்தப்படாதது ஏன் தெரியுமா?
    X

    ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் மட்டும் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்தப்படாதது ஏன் தெரியுமா?

    • இதுவரை இவிஎம்கள், 5 மக்களவை மற்றும் 130 சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • மீதமுள்ள விருப்ப எண்களை அவர்கள் விரும்பினால் போடலாம் அல்லது விட்டுவிடலாம்.

    நாட்டின் தேர்தல் செயல்முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) தொடர் சர்ச்சைப் பொருளாக இருந்து வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.

    இதுவரை இவிஎம்கள், 5 மக்களவை மற்றும் 130 சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இருப்பினும், அவை ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதித் தேர்தல்களில் பயன்படுத்தப்படவில்லை.

    இன்று நாட்டின் துணை ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுத்ர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.

    இவிஎம் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளரின் பெயருக்கு அடுத்துள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் வாக்கு பதிவு செய்யப்படுகிறது.

    ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதித் தேர்தல்கள் வேறுபட்டவை. பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கும் இந்தத் தேர்தல்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி நடத்தப்படுகின்றன.

    இவற்றில், ரகசிய வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. வாக்களிக்கும் உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தைக் குறிக்கும் வகையில் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு அருகில் எண்களை எழுத வேண்டும்.

    எண்களை 1, 2... என்ற விருப்பத்தின் வரிசையில் இருக்க வேண்டும். வாக்காளர்கள் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்கள் விரும்பும் அளவுக்கு விருப்ப எண்களை வாக்குச்சீட்டில் எழுதலாம்.

    வாக்கு செல்லுபடியாகும் வகையில், முதல் விருப்ப எண்ணை வைக்க வேண்டும். மீதமுள்ள விருப்ப எண்களை அவர்கள் விரும்பினால் போடலாம் அல்லது விட்டுவிடலாம்.

    இதற்காக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாக்களை வழங்கும். வாக்காளர்கள் அந்த பேனாவால் தங்கள் வாக்குகளை குறிக்க வேண்டும். வேறு எந்த பேனாவும் பயன்படுத்தப்பட்டால், அந்த வாக்கு செல்லாததாகக் கருதப்படும். முதல் வாக்கை பிரதமர் மோடி செலுத்துவார்.

    விருப்ப எண்ணின் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படும். தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இந்த வேறுபட்ட தொழில்நுட்பம் இல்லை. அதனால்தான் அவை ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் பயன்படுத்தப்படுவதில்லை.

    Next Story
    ×