search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "privilege motion"

    சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் தடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி யதிஷ் சந்திராவுக்கு எதிராக மக்களவையில் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை பிரச்சினையை எழுப்பினார். #Minister #PonRadhakrishnan #PrivilegeMotion #KeralaCop #YathishChandra
    புதுடெல்லி:

    சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, இந்து அமைப்பினரின் போராட்டங்களை தடுப்பதற்காக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் 21-ந்தேதி பா.ஜனதா தொண்டர்களுடன் சென்றார். இருமுடிக்கட்டுடன் சென்ற அவரை ஐ.பி.எஸ். அதிகாரி யதிஷ் சந்திரா தலைமையிலான போலீசார் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.



    பின்னர் மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் அரசு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், மீதமுள்ளவர்கள் வந்த தனியார் கார்களை அனுமதிக்கமாட்டோம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், பிற பக்தர்களுடன் அரசு பஸ்சில் சபரிமலைக்கு சென்றார்.

    இந்த பிரச்சினை நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஐ.பி.எஸ். அதிகாரி யதிஷ் சந்திராவுக்கு எதிராக மக்களவையில் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் வழியில் போலீசார் என்னை தடுத்து நிறுத்தி, தனியார் வாகனங்கள் அதற்கு மேல் செல்ல முடியாது எனக்கூறினர். மேலும் அரசு பஸ்களில் பக்தர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்.

    சபரிமலையில் நிலச்சரிவு மற்றும் நெரிசல் ஏற்படும் எனக்கருதி தனியார் வாகனங்களை அனுமதிக்கவில்லை என போலீசார் கூறினர். ஆனால் அரசு பஸ்களை அனுமதிக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு பதிலளிப்பதற்கு பதிலாக, அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பொறுப்பேற்க முடியுமா? என்று என்னிடமே போலீஸ் அதிகாரி கேள்வி எழுப்பினார். இது மக்கள் பிரதிநிதியை அவமதிக்கும் செயலாக கருதுகிறேன்.

    இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இதைக்கேட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இந்த பிரச்சினை குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.  #Sabarimala #PinarayiVijaya #PonRadhakrishnan
    ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. #MonsoonSession #Congress #Modi #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

    இதனை அடுத்து, பொய்யான தகவல்களை ராகுல் தெரிவித்ததாக குறி அவர் மீது பாராளுமன்றத்தில் பாஜக உரிமை மீறல் தீர்மான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. 



    மத்திய அரசு ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து ரகசியம் காப்பதுடன், நாட்டு மக்களுக்கு அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது, அதில் தவறு நடந்துள்ளதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்திருந்தது.

    இந்நிலையில், ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது உரிமை மீறல் பிரச்சினை என குறிப்பிட்டு மக்களவை காங்கிரஸ் தலைவர், மக்களவை சபாநாயகரிடம் இந்த நோட்டீசை இன்று அனுப்பியுள்ளார்.
    ராகுல்காந்தி மீதான உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். #Speaker #Rahulgandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர், “பிரான்சிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்து கொண்ட ஒப்பந்தம் ரகசியமானது அல்ல. இதில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களிடம் பொய் சொல்கிறார். மேலும் பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தத்தில் ஒரு குறிப்பிட்ட தொழில் அதிபருக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.  #Speaker #Rahulgandhi



    இது தொடர்பாக பா.ஜனதா எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, கொறடா அனுராக் தாகூர், துஷ்யந்த் சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோர் நேற்று சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தனர். இந்த நிலையில் மக்களவையில் நேற்று கேள்வி நேரம் தொடங்கியதும் பேசிய பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே, ராகுல்காந்தி மீது பா.ஜனதா சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்து இருக்கிறோம். ராகுல்காந்தி எப்போது பேசினாலும், அது பா.ஜனதாவிற்கு ஓட்டுகளை அதிகரிக்கச்செய்கிறது என்றார்.

    அதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, “இந்த நோட்டீஸ் குறித்து ஆய்வு செய்யப்படும். பிறகு இதுபற்றி உங்களுக்கு தெரியும்” என்றார். 
    ×