மோடி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானம் தாக்கல்

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. #MonsoonSession #Congress #Modi #NirmalaSitharaman
மோடி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானம் தாக்கல்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

இதனை அடுத்து, பொய்யான தகவல்களை ராகுல் தெரிவித்ததாக குறி அவர் மீது பாராளுமன்றத்தில் பாஜக உரிமை மீறல் தீர்மான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. 

மத்திய அரசு ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து ரகசியம் காப்பதுடன், நாட்டு மக்களுக்கு அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது, அதில் தவறு நடந்துள்ளதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்திருந்தது.

இந்நிலையில், ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது உரிமை மீறல் பிரச்சினை என குறிப்பிட்டு மக்களவை காங்கிரஸ் தலைவர், மக்களவை சபாநாயகரிடம் இந்த நோட்டீசை இன்று அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com