அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ராஜாத்தி அம்மாளுக்கு தொடர் சிகிச்சை

நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ராஜாத்தி அம்மாள் வீடு திரும்ப 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ராஜாத்தி அம்மாளுக்கு தொடர் சிகிச்சை
Published on

சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது மகள் கனிமொழி எம்.பி.யுடன் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வரும் ராஜாத்தி அம்மாளுக்கு அண்மை காலமாக அஜீரண கோளாறு-வயிற்று வலி பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராஜாத்தி அம்மாள் வீடு திரும்ப 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது. அவரை கனிமொழி எம்.பி. உடன் இருந்து கவனித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com