என் மலர்
நீங்கள் தேடியது "தந்தையர் தினம்"
- பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழ்பவர் அப்பா.
- நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய தலைவர்களுக்கும் இந்நாளில் எனது வணக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
தந்தையர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் கொள்கைத் தந்தைகளாக, இன்றளவும் நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய ஒப்பற்ற தலைவர்களுக்கும் இந்நாளில் எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி.
- தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
தந்தையர் தினத்தையொட்டி பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்!
தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்.
ஆக்குதல் அன்னையரின் பணி என்றால்,
அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி.
தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீங்க எப்பவும் எனக்கு ஒரு இடத்தை புன்னகையோடு கொடுத்தீர்கள்.
- சிரிப்பு, அரவணைப்பு, அக்கறை, அப்பா, தலைவர், நண்பர், வழிகாட்டி, சித்தாந்தவாதியை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
தந்தையர் தினத்தையொட்டி தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நீங்கள் எப்போதும் என்னை சிரிக்க வைக்கக்கூடிய மனிதர். நீங்கள் மிகவும் புத்திசாலியான மனிதர். நீங்க எப்பவும் எனக்கு ஒரு இடத்தை புன்னகையோடு கொடுத்தீர்கள்.
ஒரு தந்தையால் மட்டுமே ஒரு மகளை பராமரிக்க முடியும் என்பது போல நீங்கள் எப்போதும் என் மீது அக்கறை கொண்டிருந்தீர்கள். என் துணிச்சலை பாராட்டி உள்ளீர்கள்.
நான் ரொம்ப வலிமையானவன்னு நீங்க எப்பவும் குறை சொல்லுவீங்க, ஆனா அதுக்கும் நீங்கதான் காரணம்னு உங்களுக்குத் தெரியுமா?
சிரிப்பு, அரவணைப்பு, அக்கறை, அப்பா, தலைவர், நண்பர், வழிகாட்டி, சித்தாந்தவாதியை நான் ரொம்ப மிஸ் பண்றேன். பாடங்களுக்கும் நினைவுகளுக்கும் நன்றி என்று தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
- தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தந்தையர் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!
என்று பதிவிட்டு தனது தந்தை கலைஞர் மு.கருணாநிதியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு கேக்கின் ஸ்கிரீன்ஷாட் பயனர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
- விலை குறித்து பயனர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் ஆன்லைன் விற்பனை என்பது பலராலும் விரும்பப்படுகிறது. இதனால் பலரும் வீட்டில் இருந்தப்படியே விரும்பியதை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கிறார்கள். அப்படி ஆன்லைனில் விலை, பொருளின் தரம் பார்த்து ஆர்டர் செய்து டெலிவரி ஆகும் போது சில சமயங்களில் நாம் ஆர்டர் செய்ததற்கு பதில் வேறு பொருளோ, பொருள் சேதமோ என பலவிதமான சம்பவங்களை கேள்விபட்டிருப்போம்.
ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு கேக்கின் ஸ்கிரீன்ஷாட் பயனர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது, "தந்தையர் தின சிறப்பு ஹேசல்நட் சாக்லேட் கேக்" என்று பட்டியலிடப்பட்டுள்ள இந்த பொருளின் விலை ரூ. 5 லட்சம். இது எழுத்துப்பிழை அல்லது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் இந்த விலை குறித்து பயனர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தந்தைக்கு மிகவும் விலையுயர்ந்த பரிசை வழங்க விரும்பினால் இந்த கேக்கை வாங்கி தரலாம் என்றும் சிலர் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கேக்கிற்குள் வைரங்கள் அல்லது தங்கம் இருக்கிறதா என்று தங்கள் அப்பாக்கள் கேட்பார்கள் என்றும் கூறுகின்றனர். இப்படி பலரும் நகைச்சுவையாக பதிவிட்டனர். இதனிடையே, மற்ற கேக்குகள் விலையை குறிப்பிட்டு சிலர் விலை தவறாக பதிவிடப்பட்டுள்ளதாக கூறினர்.
தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான தந்தையர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தையொட்டி பல சிறப்பு அறிவிப்புகளை பல ஆன்லைன் நிறுவனம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும்.
- முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தந்தை யர் தினம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் அவரது அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும். இந்த நாள் உங்கள் தந்தைக்கு, வாழ்க்கையில் அவர் உங்களுக்காக செய்த தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டிட்டி நன்றி தெரிவிக்கலாம்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தை மு. கருணாநிதிக்கு நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
"தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடைய வேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று கூறியுள்ளார்.
- இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
- நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.
இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தனது மகன்களுடன் விக்னேஷ் சிவன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தினம் வாழ்த்துக்கள்" என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்து கொண்டார்.
- இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது ஆண் குழந்தைக்கு அகாய் என பெயரிட்டுள்ளனர்.
இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தனது மகள் வமிகா செய்த தந்தையர் தின வாழ்த்து அட்டையை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வமிகாவின் கால்தடம் வண்ணங்களால் பதிக்கப்பட்டுள்ளது.
அதில், "ஒருவரால் எப்படி இதனை விஷயங்களில் இவ்வளவு திறமையாக இருக்க முடியும்" என்று கோலியை அனுஷ்கா புகழ்ந்துள்ளார்.
- இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
- மகன் அகஸ்தியா உடன் விளையாடும் வீடியோவை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகஸ்தியா என பெயர் சூட்டினர்.
இந்நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார். இன்ஸ்டா பயோ-வில் இருந்து பாண்டியா பெயர் நீக்கப்பட்டு இருப்பதை அடுத்து, இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அவை எல்லாம் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.
இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தனது மகன் அகஸ்தியா உடன் விளையாடும் வீடியோவை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "என் வாழ்க்கையில் இவ்வளவு அன்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்ததற்கு நன்றி. முழு மனதுடன் உன்னை நேசிக்கிறேன். எப்போதும் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.
- சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.

தந்தையர் தினமான இன்று தனது எக்ஸ் தள பதிவில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று கூறி டோனி மகளுடன் தனது வளர்ப்பு நாயை தொட்டு வருடும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
Papa and love for puppies! ???
— Chennai Super Kings (@ChennaiIPL) June 16, 2024
A Father's day special ???
? : ziva_singh_dhoni pic.twitter.com/jKF3G9B2yx
தற்போது சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
- காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.
- உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.
தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் துணை இயக்குநராகப் பணியாற்றும் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி பயிற்சி பெற்று வரும் உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.
அப்போது ஐஏஎஸ் உமா ஹார்த்திக்கு அவரது தந்தை வெங்கடேஸ்வரலு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
- ஷிகர் தவான் ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
- இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். இவர் ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். ஆஷா முகர்ஜியும் அவரது மகனோடு ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அதனால் தனது மகனை பார்க்க முடியாமல் தவான் தவித்து வருகிறார்.
இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தவான் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது அப்பா மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், "என்னுடைய அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். என்னுடைய மகன் என்னுடன் இல்லாமல் நான் கொண்டாடும் தந்தையர் தினம் என்பதால் இது எனக்கு ரொம்ப எமோஷனலாக உள்ளது. என்னால் என் மகனுடன் பேச கூட முடியவில்லை. அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். எல்லாருக்கும் அன்பை பகிர்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.






