என் மலர்
நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிசா"
- எம்ஜிஆர் 1981-ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார்.
- பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மறைந்தும் மறையாமலும், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருபவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள். கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு, தீய சக்தி தி.மு.க-வினருக்கு புரட்சித் தலைவர் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு இன்றுவரை மறையவில்லை என்பது, தற்போதும் திமுக-வினரது செயல்கள் மூலம் வெளிப்பட்டு வருகிறது.
புரட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்த போது, 1981-ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார். அந்த பல்கலைக்கழகம் இன்றுவரை பல தமிழ் அறிஞர்களை உருவாக்கி பெரும்பேறு பெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன.
1981-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாளில் இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது என்று உள்ளதே தவிர, அதைத் தோற்றுவித்த புரட்சித் தலைவர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
மேலும், அந்த இணையதளத்தில் உள்ள போட்டோ கேலரியில் இருந்த புரட்சித் தலைவரின் படமும் நீக்கப்பட்டுள்ளதாம். தமிழை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தி வந்த முன்னாள் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் பெயரை வெட்கம் இல்லாமல் 2
கழிவறை முதல் காவாங்கரை வரை வைக்கும் அவரது மகன் ஸ்டாலின், புரட்சித் தலைவர் பெயரை, அவர் துவக்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியிருப்பது, ஸ்டாலினுடைய மமதையின் உச்சத்தைக் காட்டுகிறது.
'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்திவிடலாம்' என்று நினைப்பதுபோல், தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் இருந்து புரட்சித் தலைவரது படத்தை நீக்கிவிட்டால், புரட்சித் தலைவரின் புகழை அழித்துவிடலாம் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
வாழ்நாள் எல்லாம் தமிழக மக்களின் நலனுக்காகவே உழைத்து, தான் பாடுபட்டு சேர்த்த செல்வங்களையெல்லாம் மக்களுக்கே விட்டுச் சென்ற புரட்சித் தலைவருக்கு, மக்களே கோவில் கட்டி வழிபடுகிறார்கள்.
அரசியலைப் பயன்படுத்தி, ஊழல் செய்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த கருணாநிதி குடும்பத்தின் வஞ்சக நெஞ்சமும், நரித்தனமும் ஏற்கத்தக்கதல்ல. புரட்சித் தலைவரின் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்பது நிதர்சனம்.
இதுபோன்ற வன்மத்தை கைவிட்டுவிட்டு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் புரட்சித் தலைவர் படத்தை உடனடியாக பதிவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திரு. கருணாநிதியின் மொத்த குடும்பத்தையே வாழவைத்த இதய தெய்வம் புரட்சித் தலைவரின் புகழை அழிக்க நினைக்கும் திரு. ஸ்டாலினுக்கு, தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- இன்று காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அழைப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 30.8.2025 – சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது.
- அனைத்து ஆவணங்களையும் கடிதத்துடன் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டு உள்ளோம்.
சென்னை:
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் வா.புகழேந்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள கடிதத்தில், அ.தி.மு.க.வின் விதிகள் மற்றும் சட்ட திட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டது, கட்சி பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டது ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. இதுவேறு எந்த நீதிமன்ற உத்தரவுக்கும் உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில் பழனிசாமிதான் பொதுச்செயலாளர் என குறிப்பிடவில்லை. அதனால் பழனிசாமி தன்னை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என கூற உரிமை இல்லை. பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏற்க வேண்டாம்.
தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் படைத்தவர்கள். இந்த சூழலில் பழனிசாமியும் அவரது தரப்பினரும், பொது மக்கள் மத்தியில் பழனிசாமிதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து புகழேந்தி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கு முடிந்த பின்னர்தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர முடியும். அதுவரை இதை தகராறு உள்ள நிலையில்தான் பார்க்க முடியும். சிவில் வழக்கு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்த பின்னர்தான் முடிவு எட்டப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காத நிலையில் பொதுமக்களை ஏமாற்றவும், கழக நிர்வாகிகளை திசை திருப்பவும் தவறான அறிவிப்பை சொல்லி பழனிசாமி ஏமாற்றி வருகிறார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது.
அதற்குரிய அனைத்து ஆவணங்களையும் கடிதத்துடன் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டு உள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை தற்காலிகமாக ஈரோடு இடைத்தேர்தலுக்கு மட்டும் பொருந்தும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு எங்கள் ஒப்புதலுடன் வழங்கிய தீர்ப்பு அது.
இவ்வாறு அவர் கூறினார்.






