search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pugazhendhi"

    • விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார்
    • அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் - உதயநிதி

    விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரரான புகழேந்தி மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் - விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

    கழகப்பணி, மக்கள் பணி இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல் மிகு செயல்வீரர். அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

    இத்துயரமான நேரத்தில் அண்ணன் புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்களின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் புகழேந்தி உயர்ந்தார்.
    • புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது.

    கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

    1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார்.

    1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தியை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி - மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

    ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர்.

    • டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல்.
    • கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவசர மனு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

    மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான மனுவில," தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்.

    இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை தழுவுவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.

    கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது.
    • அனைத்து ஆவணங்களையும் கடிதத்துடன் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டு உள்ளோம்.

    சென்னை:

    டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் வா.புகழேந்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள கடிதத்தில், அ.தி.மு.க.வின் விதிகள் மற்றும் சட்ட திட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டது, கட்சி பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டது ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. இதுவேறு எந்த நீதிமன்ற உத்தரவுக்கும் உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதில் பழனிசாமிதான் பொதுச்செயலாளர் என குறிப்பிடவில்லை. அதனால் பழனிசாமி தன்னை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என கூற உரிமை இல்லை. பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏற்க வேண்டாம்.

    தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் படைத்தவர்கள். இந்த சூழலில் பழனிசாமியும் அவரது தரப்பினரும், பொது மக்கள் மத்தியில் பழனிசாமிதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

    இது குறித்து புகழேந்தி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கு முடிந்த பின்னர்தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர முடியும். அதுவரை இதை தகராறு உள்ள நிலையில்தான் பார்க்க முடியும். சிவில் வழக்கு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்த பின்னர்தான் முடிவு எட்டப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

    தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காத நிலையில் பொதுமக்களை ஏமாற்றவும், கழக நிர்வாகிகளை திசை திருப்பவும் தவறான அறிவிப்பை சொல்லி பழனிசாமி ஏமாற்றி வருகிறார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது.

    அதற்குரிய அனைத்து ஆவணங்களையும் கடிதத்துடன் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டு உள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை தற்காலிகமாக ஈரோடு இடைத்தேர்தலுக்கு மட்டும் பொருந்தும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு எங்கள் ஒப்புதலுடன் வழங்கிய தீர்ப்பு அது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள்.
    • பண்ருட்டியார் கூறியது போல தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது.

    பெரியகுளம்:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவால் கடந்த 24-ந்தேதி காலமானார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மற்றும் புகழேந்தி ஆகியோர் ஓ.பி.எஸ். வீட்டுக்கு வந்து தாயார் பழனியம்மாள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    அதன் பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    3 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. இது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எதிர்கட்சியினர் கூட இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தி சென்றனர். அரசியலில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். இக்கட்சியை வழிநடத்தி மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி அவரது துக்கத்தில் பங்கெடுத்துள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவின் போது ஓ.பன்னீர்செல்வம் இறுதிவரை இருந்து அவரது துக்கத்தில் பங்கெடுத்தார். தற்போதைய நடவடிக்கை ஒரு நிரந்தர பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் பிளவு என்பது உறுதியாகி விட்டது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள். இனிமேல் அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. ஒரு காலத்தில் ஸ்தாபன காங்கிரசின் நிலைப்பாடு குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியபோது, முதலில் ஏற்றுக்கொள்ளாத எம்.ஜி.ஆர். பின்னர் உணர்ந்து கொண்டார்.

    பண்ருட்டியார் கூறியது போல தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது. ஓ.பி.எஸ்.சின் அடுத்தகட்ட ஆட்டம் இனிமேல்தான் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முறையான அழைப்பு வந்தால் தான் பிரசாரத்துக்கு செல்வோம்.
    • இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றாக இருந்து பிரசாரம் செய்தால் தான் சரியாக இருக்கும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்வாரா? என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    ஈரோடு தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரான செந்தில்முருகனை வாபஸ் பெற வைத்தார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி விட்டது. இந்த சூழலில் அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் பிரசாரம் செய்ய தயாராக உள்ளோம்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான செம்மலை கூறுகையில், ஓ.பி.எஸ் பிரசாரத்துக்கு வருவது பற்றி எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்யணும் என்று கூறி இருக்கிறார்.

    இதுவரை குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு இரட்டை இலைக்கு பிரசாரம் செய்ய வருவதா? என்ற வகையில் பேசி இருக்கிறார்.

    எங்களை பொறுத்த வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முறையான அழைப்பு வந்தால் தான் பிரசாரத்துக்கு செல்வோம்.

    இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றாக இருந்து பிரசாரம் செய்தால் தான் சரியாக இருக்கும். வெற்றி கிடைக்கும். எனவே அதை மனதில் வைத்து தான் நாங்கள் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்று கூறினோம்.

    எங்களை வேண்டா வெறுப்பாக நடத்தினால் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்தால் அவர்களுக்கு தான் இழப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பால் விலை உயர்வுக்கு ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • பால் விலையை குறைக்காவிட்டால் ஓ.பி.எஸ்-ன் ஆணைக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு எவரும் வர முடியாது. இருக்கவும் முடியாது. தங்கமணியும் வேலுமணியும் எடப்பாடி பழனிசாமியை இயக்குவதில் பின்புலமாக உள்ளனர். தங்கமணிக்கு முதல்-அமைச்சராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் அவரது விருப்பு வெறுப்பு காரணமாக 4 தொகுதிகளை அ.தி.மு.க. இழந்தது.

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இரட்டை இலை சின்னம் இல்லாமல் தங்கமணி தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா? ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவி தருவதாக தங்கமணி பேசியுள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இல்லாத அதிகாரமா? இவர்கள் யார் மந்திரி பதவி தருவதற்கு? இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? பிரிந்து இருக்கின்ற அ.தி.மு.க.வினர் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டு அ.தி.மு.க.வை வலுப்படுத்த ஓ.பி.எஸ். தயாராக உள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கூடிய விரைவில் பா.ஜ.க.வில் சேர தயாராக உள்ளனர்.

    பால் விலை உயர்வுக்கு ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார். பால் விலையை குறைக்காவிட்டால் ஓ.பி.எஸ்-ன் ஆணைக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தி.மு.க அரசு ஏன் கால தாமதம் செய்கிறது என்று தெரியவில்லை. துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

    தற்போது சொத்து வரி உள்பட விலைவாசி ஏறியுள்ளது. மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். சொத்து வரியை குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு 954 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது அவர் இனி சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறினார். ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், எம்.எல்.ஏக்களும் முறைகேடு செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஓ.பி.எஸ் அணி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவறாக வழிநடத்தி வருகின்றனர்.
    • அரசியலில் பச்சோந்தி என்றால் அது கே.பி.முனுசாமிதான். பன்னீர்செல்வம் நிறம்மாறாத பூ போன்றவர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜெயலலிதா காலத்தில் அவருக்கு அருகில் இருந்து செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அதிகார வெறியால் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதல் காரணமாக என்னை மட்டுமின்றி தனது தம்பி ஓ.ராஜாவையும் கட்சியில் இருந்து நீக்கினார். அவர்கள் கூறிய அத்தனை விஷயங்களையும் ஏற்றுக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக செயல்பட்டார்.

    ஆனால் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்க துடிக்கிறார். அவர் ஒருபோதும் அ.தி.மு.க.வின் மன்னனாக முடிசூட முடியாது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4500 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த வழக்கில் அவர் விரைவில் சிறைக்கு செல்வார்.

    பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவறாக வழிநடத்தி வருகின்றனர். அரசியலில் பச்சோந்தி என்றால் அது கே.பி.முனுசாமிதான். பன்னீர்செல்வம் நிறம்மாறாத பூ போன்றவர். எப்போதும் ஒரேமாதிரிதான் இருப்பார். கே.பி.முனுசாமி ஒரு எட்டப்பன். பழனிசாமி கூடவே இருந்து அவரை காலி செய்யும் பணியை செய்து வருகிறார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா என்னிடம் பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்ததுதான் மிகப்பெரிய தவறு என்று கூறினார். இந்தியாவின் ஊழல்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழலாக செய்த நெடுஞ்சாலைத்துறை ஊழலில் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணைய அறிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் மீது ஜெயக்குமார் குற்றம் சாட்டுவது கண்டணத்துக்குரியது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விரைந்து நடத்தும்படி தி.மு.க. அரசை கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பெரிய போராட்டத்தை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஓசூரில் புகழேந்தியும், நெல்லையில் மைக்கேல் ராயப்பனும் போட்டியிடுவார்கள் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். #LSPolls #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி 38 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது.

    அ.ம.மு.க. சார்பில் பாராளுமன்ற தொகுதிக்கு 36 வேட்பாளர்களும் கூட்டணி கட்சியான எஸ்.பி.டி.ஐ. சார்பில் ஒரு வேட்பாளரும் போட்டியிடுகிறார்கள். 17 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஓசூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.



    ஓசூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக கட்சியின் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், கர்நாடக மாநில அ.ம.மு.க.வின் செயலாளருமான வி.புகழேந்தி போட்டியிடுவார் என்று டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பிறந்த இவர் ஓசூரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் கர்நாடக மாநில ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தார். தினகரன் தீவிர ஆதரவாளரான இவர் தற்போது அ.ம.மு.க.வில் உள்ளார்.

    ஓசூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பாலகிருஷ்ணரெட்டி வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தார். இதனால் இந்த தொகுதி காலியானது. தற்போது இங்கு அ.தி.மு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் சத்யா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

    திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக ஆர்.ஞான அருள்மணி அறிவிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக கட்சியின் அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் ராயப்பன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி மாநில அ.ம.மு.க. இளைஞர் அணி செயலாளர் என்.தமிழ்மாறன் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். #LSPolls #AMMK #TTVDhinakaran
    ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இடையே தகராறு தொடங்கி விட்டது. அது விரைவில் வெளி உலகத்திற்கு தெரிய வரும் என்று புகழேந்தி கூறினார். #Pugazhendhi #OPS #EPS
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம் பண்ணையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செய்தி தொடர்பாளா புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா கொடுத்த பதவியை தவறாக பயன்படுத்திய துரோகி எடப்பாடி. எங்கள் பொதுக்கூட்டங்களுக்கு தொண்டர்கள், பொது மக்களை காசு கொடுத்து அழைத்து வரவில்லை. அவர்களாக வருகின்றனர்.

    ஆனால் முதல்வர் சாத்தூர் வந்த போது கட்சியினரும், போலீசாரும் மட்டுமே இருந்தனர். பொது மக்கள் யாரும் செல்லவில்லை. தேர்தல் வந்தால் யாருக்கு டெபாசிட் கிடைக்காது என்பதை பொது மக்கள் தீர்மானிப்பார்கள்.

    எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்கமாட்டார். துரோகம் செய்ய எங்களுக்கு தெரியாது.

    தினகரன் கட்சிக்காக பாடுபட்டது குறித்து உடனிருந்த துணை முதல்வர் பன்னீருக்கு நன்றாக தெரியும். தினகரன் ஜெயிலுக்கு போனாரா என கேட்கும் முதல்வர் எத்தனை முறை ஜெயிலுக்கு சென்றுள்ளார்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயிக்க முடியாது என அமைச்சர் உதயகுமார் கூறியதால் இடைதேர்தல் நடத்த தமிழக அரசு நாதியற்ற அரசாக உள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே தகராறு தொடங்கி விட்டது விரைவில் வெளி உலகத்துக்கு அது தெரிய வரும்.

    கொடநாடு கொலைக்கான காரணம் விசுவரூபம் எடுத்து வருகிறது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை குற்றமற்றவன் என தமிழக மக்களுக்கு, எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும். முதல்வரை கொலைகாரனாக மக்கள் பார்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஏழாயிரம்பண்ணையில் நடந்த பொதுக்கூட்டத்தில் புகழேந்தி பேசியதாவது:-

    இடைத்தேர்தல்களை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க., தயாராக இல்லை. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் ஸ்டாலின் வேட்பாளர் வெற்றி பெறமுடியாது என கட்சியினர் அவரிடம் தெரிவித்ததால் தேர்தல் ஆணையத்திடம் தேர்தலை தள்ளி போடச் சொல்லி மனு கொடுத்தனர்.

    8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசு தொழிலை காப்பாற்ற அ.தி.மு.க அரசு முயற்சி செய்யவில்லை. சிவகாசி முன்னாள் எம்.பி.யாக இருந்த வைகோ எதற்கெல்லாமோ குரல் கொடுக்கிறார்.

    தன்னை தோற்கடித்த தொகுதி என்பதாலோ என்னவோ பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருப்பது குறித்து குரல் கொடுக்கவில்லை.

    ஆனால் பட்டாசு தொழில் அழிந்து விடக்கூடாது என்பதை தினகரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் ஜெயிலுக்கு போவது உறுதி.

    ஜி.எஸ்.டி.யால் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. மோடியை எதிர்க்க தி.மு.க. தலைவர் கூடப் பயப்படுகிறார். ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும் மோடியை தைரியமாக எதிர்க்க கூடிய தலைவர் தினகரன் மட்டுமே.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Pugazhendhi #OPS #EPS
    கொடநாடு கொள்ளை சம்பவத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு உள்ளது என புகழேந்தி தெரிவித்துள்ளார். #Pugazhendhi #Kodanadestate #OPS
    திண்டுக்கல்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீதிமன்ற உத்தரவை மீறி பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளதாக பழி சுமத்தப்படுகிறது. ஆனால் சிறையில் சசிகலா பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.

    தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை. டெல்லில் இருந்து பிரதமர் மோடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி செய்கிறார். பா.ஜனதா அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டால் 3 மணி நேரம்கூட அவர் தமிழக முதல்வராக இருக்க முடியாது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு மருத்துவ கல்லூரி கட்ட அனுமதி அளிக்காததால் மத்திய அரசுக்கு எதிராக பேசி வருகிறார்.


    கொடநாடு கொள்ளை சம்பவத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு உள்ளது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இந்த வழக்கில் பொன்.மாணிக்கவேலை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். இடைத்தேர்தலை கண்டு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் பயப்படுகின்றனர். எனவே திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க ஆதரவு கொடுத்துள்ளனர். மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்பொழுதும் தெளிவான முடிவு எடுப்பார். ஆனால் ஸ்டாலினுக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugazhendhi #Kodanadestate #OPS
    இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி என்று கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தெரிவித்தார். #Pugazhendhi #TTVDhinakaran #ADMK
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை ரெட் அலர்ட் காரணம் கூறி தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 20 தொகுதிகளும் காலியாக உள்ளன.

    அ.ம.மு.க. சார்பில் அத்தொகுதிகளில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இதனையும் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் காரணம் தேடி தேர்தலை நிறுத்த முயன்றால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியது வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை பெற 8 தொகுதிகளில் வென்றாலே போதும் என பேசுகின்றனர்.


    தமிழகத்தில் 234 தொகுகளிலும் தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெற முடியாது. உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் என எந்த தேர்தலையும் சந்திக்க அ.தி.மு.க. பயந்து வருகிறது.

    கர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு வரும் மக்களவை தேர்தல்களிலும் எதிரொலிக்கும். உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆதரவு குறைந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இடங்களை ரஜினி மற்றும் கமல்ஹாசனால் ஒரு போதும் பிடிக்க முடியாது. சர்கார் படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ இலவச விளம்பரம் தேடித்தந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugazhendhi #TTVDhinakaran #ADMK
    ×