என் மலர்
நீங்கள் தேடியது "pugazhendhi"
- பால் விலை உயர்வுக்கு ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்.
- பால் விலையை குறைக்காவிட்டால் ஓ.பி.எஸ்-ன் ஆணைக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு எவரும் வர முடியாது. இருக்கவும் முடியாது. தங்கமணியும் வேலுமணியும் எடப்பாடி பழனிசாமியை இயக்குவதில் பின்புலமாக உள்ளனர். தங்கமணிக்கு முதல்-அமைச்சராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் அவரது விருப்பு வெறுப்பு காரணமாக 4 தொகுதிகளை அ.தி.மு.க. இழந்தது.
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இரட்டை இலை சின்னம் இல்லாமல் தங்கமணி தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா? ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவி தருவதாக தங்கமணி பேசியுள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இல்லாத அதிகாரமா? இவர்கள் யார் மந்திரி பதவி தருவதற்கு? இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? பிரிந்து இருக்கின்ற அ.தி.மு.க.வினர் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டு அ.தி.மு.க.வை வலுப்படுத்த ஓ.பி.எஸ். தயாராக உள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கூடிய விரைவில் பா.ஜ.க.வில் சேர தயாராக உள்ளனர்.
பால் விலை உயர்வுக்கு ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார். பால் விலையை குறைக்காவிட்டால் ஓ.பி.எஸ்-ன் ஆணைக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தி.மு.க அரசு ஏன் கால தாமதம் செய்கிறது என்று தெரியவில்லை. துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.
தற்போது சொத்து வரி உள்பட விலைவாசி ஏறியுள்ளது. மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். சொத்து வரியை குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு 954 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது அவர் இனி சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறினார். ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், எம்.எல்.ஏக்களும் முறைகேடு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஓ.பி.எஸ் அணி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவறாக வழிநடத்தி வருகின்றனர்.
- அரசியலில் பச்சோந்தி என்றால் அது கே.பி.முனுசாமிதான். பன்னீர்செல்வம் நிறம்மாறாத பூ போன்றவர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜெயலலிதா காலத்தில் அவருக்கு அருகில் இருந்து செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அதிகார வெறியால் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதல் காரணமாக என்னை மட்டுமின்றி தனது தம்பி ஓ.ராஜாவையும் கட்சியில் இருந்து நீக்கினார். அவர்கள் கூறிய அத்தனை விஷயங்களையும் ஏற்றுக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக செயல்பட்டார்.
ஆனால் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்க துடிக்கிறார். அவர் ஒருபோதும் அ.தி.மு.க.வின் மன்னனாக முடிசூட முடியாது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4500 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த வழக்கில் அவர் விரைவில் சிறைக்கு செல்வார்.
பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவறாக வழிநடத்தி வருகின்றனர். அரசியலில் பச்சோந்தி என்றால் அது கே.பி.முனுசாமிதான். பன்னீர்செல்வம் நிறம்மாறாத பூ போன்றவர். எப்போதும் ஒரேமாதிரிதான் இருப்பார். கே.பி.முனுசாமி ஒரு எட்டப்பன். பழனிசாமி கூடவே இருந்து அவரை காலி செய்யும் பணியை செய்து வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா என்னிடம் பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்ததுதான் மிகப்பெரிய தவறு என்று கூறினார். இந்தியாவின் ஊழல்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழலாக செய்த நெடுஞ்சாலைத்துறை ஊழலில் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணைய அறிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் மீது ஜெயக்குமார் குற்றம் சாட்டுவது கண்டணத்துக்குரியது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விரைந்து நடத்தும்படி தி.மு.க. அரசை கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பெரிய போராட்டத்தை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி 38 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது.
அ.ம.மு.க. சார்பில் பாராளுமன்ற தொகுதிக்கு 36 வேட்பாளர்களும் கூட்டணி கட்சியான எஸ்.பி.டி.ஐ. சார்பில் ஒரு வேட்பாளரும் போட்டியிடுகிறார்கள். 17 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பிறந்த இவர் ஓசூரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் கர்நாடக மாநில ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தார். தினகரன் தீவிர ஆதரவாளரான இவர் தற்போது அ.ம.மு.க.வில் உள்ளார்.
ஓசூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பாலகிருஷ்ணரெட்டி வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தார். இதனால் இந்த தொகுதி காலியானது. தற்போது இங்கு அ.தி.மு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் சத்யா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக ஆர்.ஞான அருள்மணி அறிவிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக கட்சியின் அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் ராயப்பன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில அ.ம.மு.க. இளைஞர் அணி செயலாளர் என்.தமிழ்மாறன் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். #LSPolls #AMMK #TTVDhinakaran
விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம் பண்ணையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செய்தி தொடர்பாளா புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
சசிகலா கொடுத்த பதவியை தவறாக பயன்படுத்திய துரோகி எடப்பாடி. எங்கள் பொதுக்கூட்டங்களுக்கு தொண்டர்கள், பொது மக்களை காசு கொடுத்து அழைத்து வரவில்லை. அவர்களாக வருகின்றனர்.
ஆனால் முதல்வர் சாத்தூர் வந்த போது கட்சியினரும், போலீசாரும் மட்டுமே இருந்தனர். பொது மக்கள் யாரும் செல்லவில்லை. தேர்தல் வந்தால் யாருக்கு டெபாசிட் கிடைக்காது என்பதை பொது மக்கள் தீர்மானிப்பார்கள்.
எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்கமாட்டார். துரோகம் செய்ய எங்களுக்கு தெரியாது.
தினகரன் கட்சிக்காக பாடுபட்டது குறித்து உடனிருந்த துணை முதல்வர் பன்னீருக்கு நன்றாக தெரியும். தினகரன் ஜெயிலுக்கு போனாரா என கேட்கும் முதல்வர் எத்தனை முறை ஜெயிலுக்கு சென்றுள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயிக்க முடியாது என அமைச்சர் உதயகுமார் கூறியதால் இடைதேர்தல் நடத்த தமிழக அரசு நாதியற்ற அரசாக உள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே தகராறு தொடங்கி விட்டது விரைவில் வெளி உலகத்துக்கு அது தெரிய வரும்.
கொடநாடு கொலைக்கான காரணம் விசுவரூபம் எடுத்து வருகிறது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை குற்றமற்றவன் என தமிழக மக்களுக்கு, எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும். முதல்வரை கொலைகாரனாக மக்கள் பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஏழாயிரம்பண்ணையில் நடந்த பொதுக்கூட்டத்தில் புகழேந்தி பேசியதாவது:-
இடைத்தேர்தல்களை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க., தயாராக இல்லை. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் ஸ்டாலின் வேட்பாளர் வெற்றி பெறமுடியாது என கட்சியினர் அவரிடம் தெரிவித்ததால் தேர்தல் ஆணையத்திடம் தேர்தலை தள்ளி போடச் சொல்லி மனு கொடுத்தனர்.
8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசு தொழிலை காப்பாற்ற அ.தி.மு.க அரசு முயற்சி செய்யவில்லை. சிவகாசி முன்னாள் எம்.பி.யாக இருந்த வைகோ எதற்கெல்லாமோ குரல் கொடுக்கிறார்.
தன்னை தோற்கடித்த தொகுதி என்பதாலோ என்னவோ பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருப்பது குறித்து குரல் கொடுக்கவில்லை.
ஆனால் பட்டாசு தொழில் அழிந்து விடக்கூடாது என்பதை தினகரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் ஜெயிலுக்கு போவது உறுதி.
ஜி.எஸ்.டி.யால் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. மோடியை எதிர்க்க தி.மு.க. தலைவர் கூடப் பயப்படுகிறார். ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும் மோடியை தைரியமாக எதிர்க்க கூடிய தலைவர் தினகரன் மட்டுமே.
வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #Pugazhendhi #OPS #EPS
அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீதிமன்ற உத்தரவை மீறி பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளதாக பழி சுமத்தப்படுகிறது. ஆனால் சிறையில் சசிகலா பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.

இந்த வழக்கில் பொன்.மாணிக்கவேலை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். இடைத்தேர்தலை கண்டு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் பயப்படுகின்றனர். எனவே திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க ஆதரவு கொடுத்துள்ளனர். மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்பொழுதும் தெளிவான முடிவு எடுப்பார். ஆனால் ஸ்டாலினுக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Pugazhendhi #Kodanadestate #OPS
கொடைக்கானலில் கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை ரெட் அலர்ட் காரணம் கூறி தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 20 தொகுதிகளும் காலியாக உள்ளன.

கர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு வரும் மக்களவை தேர்தல்களிலும் எதிரொலிக்கும். உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆதரவு குறைந்துள்ளது.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இடங்களை ரஜினி மற்றும் கமல்ஹாசனால் ஒரு போதும் பிடிக்க முடியாது. சர்கார் படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ இலவச விளம்பரம் தேடித்தந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #Pugazhendhi #TTVDhinakaran #ADMK
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இருந்த பனிப்போர், தெரு சண்டையாக மாறி, ஓ.பன்னீர்செல்வம் வெளியே வரும் காலம் வந்து விட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லாததால், பயிர்கள் கருகி விவசாயிகள் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரும் பணி முறையாக நடைபெறாதது தான்.
தூர்வாரும் பணிக்கான பொறுப்பை எடுத்து கொண்டு அதில் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் விவசாயம் பாதித்து தண்ணீர் கடலில் கலந்தது குறித்து கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கட்சி தலைவர்களும் பேசிக்கொள்கிறார்கள்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வாழ்நாளை சிறையில் கழித்த பேரளறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு, தமிழக கவர்னர் காலம் தாழ்த்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Pugazhendhi #EdappadiPalaniswami #OPanneerSelvam
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் சசிகலா பிறந்த நாளின் போது எங்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உற்சாகமாக எங்களிடம் பேசினார். இனிமேலாவது அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #Pugazhendhi
அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தியை கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தின கரன் நியமித்துள்ளார். அதற்காக தினகரனுக்கு, புகழேந்தி நன்றி தெரிவித்தார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, புகழேந்தியை இரண்டு முறை தொகுதி பொறுப்பாளராக நியமித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #TTVDhinakaran
பெங்களூர்
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிறையில் வசதிகள் செய்துகொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. உள்பட அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்திய குழுவினர் அறிக்கையினை உள்துறை மந்திரியிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்றும், இதற்காக ரூ.2கோடி லஞ்சம் வழங்கப்பட்டதா என்று தனக்கு தெரியாது என்று கூறி இருந்தார்.
ரூ.2 கோடி லஞ்சம் விவகாரம் குறித்து கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே முன்னாள் ஜெயில் டி.ஐ.ஜி.யும், தற்போது ஊர்காவல் படை ஐ.ஜி.யுமான ரூபாவிடம் விசாரணை நடத்தினர். சிறை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகளையும் அழைத்து விசாரணை நடத்தினர். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரான பெங்களூரு புகழேந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஊழல் தடுப்புப்படை பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். கடந்த மாதம் 29-ந் தேதி நேரில் ஆஜராகி போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறி இருந்தனர். ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி புகழேந்தி அன்று ஆஜராகவில்லை.
இன்று (2-ந்தேதி) ஆஜராவதாக கூறி இருந்தார். அதன்படி இன்று பகல் 11.30 மணிக்கு அவர் பெங்களூருவில் உள்ள லஞ்ச ஒழிப்புபடை தலைமை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Sasikala #Pugazhendhi
கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி கொடைக்கானல் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு காட்டு மிராண்டித்தனமான செயல். இதற்கு காரணமான மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது கண்துடைப்பு நாடகம். சட்டமன்ற கூட்டத்தில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக இதனை அறிவித்துள்ளனர்.
கூட்டத்தொடர் முடிந்ததும் நீதிமன்றம் உத்தரவிட்டது என கூறி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். இனி எக்காலத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை அங்கு திறக்கவே கூடாது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வரும். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே அந்த தீர்ப்பும் இருக்கும். அப்போது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருகக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Pugazhendhi