என் மலர்
நீங்கள் தேடியது "Income Tax Dept"
- வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடியாக உள்ளது.
- ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரியை செலுத்தாவிடில் சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதில், ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார். வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடியாக உள்ளது என்றது.
ரூ.13 கோடி வரி பாக்கியை செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பி நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதா, தீபக் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரித்துறை தரப்பு வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
- நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.
- வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார் தெரிவிக்கலாம்.
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.
அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம்.
1800 425 6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற Whatsapp எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






