search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inbadurai"

    • ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
    • சட்டங்கள் எதுவும் தெரியாமல் தற்போது உள்ள தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியின் அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. தேர்தல் இன்பதுரை மற்றும் அ.தி.மு.க.வினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

    குடிநீர் தட்டுப்பாடு

    அவர் அளித்த மனுவில், கூடங்குளம் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உடனடியாக கலெக்டர் தலையிட்டு கூடங்குளம் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வள்ளியூர் பஸ் நிலை யத்தில் கட்டிட வேலையை துரிதப்படுத்த வேண்டும். பெரும்பாலான பஸ்கள் வள்ளியூர் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அனைத்து பஸ்களும் வள்ளியூர் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிரு ந்தார்.

    பேட்டி

    தொடர்ந்து இன்பதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசால் லண்டன் மாநகரில் திறக்கப்பட்ட பென்னிகுயிக் உருவ சிலைக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால் கருப்பு துணி கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. லண்டன் மாநகரில் தமிழகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

    சபாநாயகர் தொகுதியான ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடும் சூழல் உருவாகி உள்ளது. கட்டுமான நிறுவனங்கள், அணுமின் நிலையம் உள்ளிட்ட வைகளுக்கு தண்ணீரை விற்பனை செய்வதே இது போன்ற நிலைக்கு காரணம்.

    வருமானத்துறை சோதனையின் போது அதிகாரிகள் மீது தாக்குதல் நட த்தப்பட்டது கண்டனத்தி ற்குரியது. அதிகாரிகளுக்கு இது சோதனையான காலம். கரூர் மாவட்ட எஸ்.பி. மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சி.ஆர்.பி.சி., ஐ.பி.சி. போன்ற சட்டங்கள் எதுவும் தெரியாமல் தற்போது உள்ள தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

    பீகார், ஒரிசா, தெலுங்கு படங்களில் மட்டும் தான் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ராதாபு ரத்தில் புதிய திறப்பு விழா கண்டு கொண்டிருக்கிறனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காரின் கதவு மூடிக் கொண்டதால் 3 சிறுவர்களும் காரிலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
    • முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை நிதியுதவி

    நெல்லை:

    பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் நிதிஷ், மகள் நிதிஷா பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கபிஷன் ஆகியோர் சம்பவத்தன்று வீட்டின் எதிரே உள்ள பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடினர்.

    அப்போது திடீரென காரின் கதவு மூடிக் கொண்டதால் திறக்க முடியாமல் 3 சிறுவர்களும் காரிலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் லெப்பை குடியிருப்பு கிராமத்திற்கு சென்ற அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை, பரிதாபமாக உயிரிழந்த 3 சிறுவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுடைய பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம், செல்வராஜ், அந்தோணி அமலராஜா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், மாவட்ட இணைசெயலாளர் ஞானபுனிதா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சந்திரமோகன், வள்ளியூர் பேரூர் துணை செயலாளர் கருப்பசாமி, பணகுடி பேரூர் துணை செயலாளர் ஜெகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தீபக், ரஸ்வின், விவேக், லெப்பை குடியிருப்பு கிளை செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏழைகளின் அரசாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளது என்று இன்பதுரை எம்எல்ஏ கூறியுள்ளார். #EdappadiPalaniswami #ADMK

    சென்னை:

    தமிழக சட்டசபையில் ராதாபுரம் தொகுதி இன்பதுரை எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 தருகின்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளைப் பற்றி இறங்கிப் பார்க்கின்ற அரசு. ஏழைகளுக்கு இறங்குகின்ற அரசு. அடுக்கடுக்காய் பல திட்டங்களை இந்த அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. .

    தேசிய தனிநபர் வருமானம் 1,13,000 ஆகும். இந்திய தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டினுடைய தனிநபர் வருமானம் ரூ.30 ஆயிரம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவிற்கு வழி காட்டும் விதமாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

     


    அரும்பு தோற்கிற சிரிப்பு, கரும்பு தோற்கிற இனிமை, எறும்பு தோற்கிற சுறுசுறுப்பு, இரும்பு தோற்கிற மன உறுதியைக் கொண்டவர் நம்முடைய முதல்- அமைச்சர். அவர் ஒரு உத்தரவைப் போட்டார். தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதற்கு தடை வந்தது.

    புரட்சித் தலைவருக்கு ஒரு சத்துணவு திட்டம் எவ்வாறு பெயர் பெற்றுத் தந்ததோ, புரட்சித்தலைவிக்கு தொட்டில் குழந்தை திட்டம் எப்படி இருக்கின்றதோ, அதுபோல் நெகிழி இல்லாத தமிழகத்தை நம்முடைய முதல்-அமைச்சர் உருவாக்கியிருக்கிறார். எனவே அவருடைய பெயர் வரலாற்றில் நிலைத்து இருக்கும் என்பதை நான் இங்கு நெகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami #ADMK

    ×