search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Childrens Family"

    • காரின் கதவு மூடிக் கொண்டதால் 3 சிறுவர்களும் காரிலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
    • முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை நிதியுதவி

    நெல்லை:

    பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் நிதிஷ், மகள் நிதிஷா பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கபிஷன் ஆகியோர் சம்பவத்தன்று வீட்டின் எதிரே உள்ள பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடினர்.

    அப்போது திடீரென காரின் கதவு மூடிக் கொண்டதால் திறக்க முடியாமல் 3 சிறுவர்களும் காரிலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் லெப்பை குடியிருப்பு கிராமத்திற்கு சென்ற அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை, பரிதாபமாக உயிரிழந்த 3 சிறுவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுடைய பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம், செல்வராஜ், அந்தோணி அமலராஜா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், மாவட்ட இணைசெயலாளர் ஞானபுனிதா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சந்திரமோகன், வள்ளியூர் பேரூர் துணை செயலாளர் கருப்பசாமி, பணகுடி பேரூர் துணை செயலாளர் ஜெகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தீபக், ரஸ்வின், விவேக், லெப்பை குடியிருப்பு கிளை செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×