என் மலர்
நீங்கள் தேடியது "மதுரை உயர்நீதிமன்ற கிளை"
- அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
- வாகனங்களை முறைப்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை முருக பக்தர் மாநாடு நாளை மறுநாள் (22-ந்தேதி, ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வரக்கூடிய பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாகனத்திற்கான அனுமதி பாஸ் வாங்கி வர வேண்டுமென தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த உத்தரவினை எதிர்த்து இந்து முன்னணி சார்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்து முன்னணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனந்தபத்மநாபன், வாகனத்தில் வரக்கூடியவர்கள் முறையான வாகன அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை அண்ணா நகர் காவல் துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு இவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, "இதுபோன்று அதிக அளவில் பொது மக்கள் கூட கூடிய மாநாடுகளுக்கு வரக்கூடிய வாகனங்களை முறைப்படுத்து வதற்காக அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறை இந்த உத்தரவுகளை தலைமை காவலருக்கு மேல் உள்ள அதிகாரிகள் வழங்கலாம் என சட்டம் உள்ளது" என தெரிவித்தார்.
மேலும், "இந்த உத்தரவு என்பது மாநாடுக்கு வரக்கூடிய வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு இல்லை, வாகனங்களை முறைப்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாநாடுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் காவல்துறை போலீஸ் சோதனை மையம் அமைக்க வேண்டும். மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம், ஓட்டுனரின் ஆதார் அட்டை, வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறையிடம் வழங்க வேண்டும்.
இதனை பதிவு செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும்.
- சாதியை குறிக்கும் வண்ணக்கயிறுகள், சாதியை குறிக்கும் நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர டீன்களை நியமிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை, திருச்சி, விருதுநகர் மருத்துவ கல்லூரிகளில் டீன்களை உடனடியாக நியமிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது விரைந்து நியமனப்படுத்துவதில் காலதாமதம் ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில், பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்கான ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியன் விமர்சித்தார்.
"பள்ளிகளில் சாதிய மோதல்களை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அளித்த பரிந்துரைகள் என்னைப் பொறுத்த அளவில் ஏற்புடையது அல்ல. சாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கைக்கு பிறகே, நான் பொட்டு வைத்து வருகிறேன்" என்று நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களின் கைகளில் சாதியை குறிக்கும் வண்ணக்கயிறுகள், சாதியை குறிக்கும் நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்கான ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம்.
- இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் குருக்கள் மற்றும் அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப உத்தவிரடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ராமநாதசுவாமி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர். கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு. ஊதியம், பராமிரிப்பு போக மீதம் உள்ள தொகை எவ்வளவு? எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கோவிலில் 12 குருக்கள், 19 உதவி குருக்கள் பணிகள் இருக்க வேண்டும். ஆனால் 2 குருக்கள், 7 உதவி குருக்கள் பணியில் உள்ளனர். ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம் வரும் நிலையில், இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை எனக் கூறியிருந்தார்.
நீதிபதிகள் விசாரணையின்போது இந்து அறநிலைத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. வசூல்ராஜா வேலைகளை மட்டுமே செய்கின்றன என கண்டித்தனர். அத்துடன் அடுத்த மாதம் 14-ந்தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.






