search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FullMoon"

    • பவுர்ணமி சிறப்பு பூஜையையொட்டி வள்ளி, தேவசேனா, சமேத கல்யாண முருகனுக்கு அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.
    • விழாவில் 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர், வள்ளி, தேவசேனா, சமேத கல்யாண முருகன் சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 7மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை வீரவாஞ்சிநகர் திருவிளக்கு பூஜை குழுவினர் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு, சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • கருப்பசாமி, பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள புளியறை வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.

    விழாவில் கருப்பசாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது. அதனைத்தொடா்ந்து அன்னதானம் நடந்தது.

    விழா ஏற்பாடுகள் ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளையின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×