என் மலர்
நீங்கள் தேடியது "FullMoon"
- தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் உருவாக்கப்பட்டுள்ளது.
- வங்கக் கடலே சிறுத்துப் போனதைப் போன்று மாநாட்டுத் திடலில் பாட்டாளி சொந்தங்கள் குவிந்திருந்தனர்.
பா.ம.க. சார்பில் நேற்று மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் உருவாக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றிகரமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பது தான் புதிய மைல்கல் ஆகும். இதை சாத்தியமாக்கிய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வானிலிருந்து பார்த்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஒருபுறத்தில் ததும்பி வழிந்து கொண்டிருந்த மனிதக்கடலுடன் ஒப்பிட்டால் வங்கக் கடலே சிறுத்துப் போனதைப் போன்று மாநாட்டுத் திடலில் பாட்டாளி சொந்தங்கள் குவிந்திருந்தனர்.
15 லட்சத்துக்கும் கூடுதலான பாட்டாளி சொந்தங்கள் மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த நிலையில், நெரிசல் காரணமாக மாமல்லபுரத்தை நெருங்க முடியாமல் செங்கல்பட்டுக்கு அப்பாலும் பல்லாயிரக்கணக்கான ஊர்திகள் அணிவகுத்துக் காத்திருந்தன. லட்சக் கணக்கில் தொண்டர்கள் திரண்டிருந்தாலும் கூட எந்தவொரு இடத்திலும் சிறு ஒழுங்குமீறல்கள் கூட நடைபெறவில்லை.
இராணுவத்தையே விஞ்சும் அளவுக்கு பாட்டாளி சொந்தங்கள் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் மாநாட்டிற்கு வந்து, பத்திரமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றிருப்பது மாநாட்டுக்குழுத் தலைவர் என்ற முறையில் எனக்கு மிகுந்த பெருமையும், நிம்மதியும் அளிக்கிறது.
மாமல்லபுரம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும், மாநாட்டுக் குழுத் தலைவராக என்னை நியமித்ததற்காகவும், மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்ததற்காகவும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளி சொந்தங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மிகக் கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிராமம் என அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், குறிப்பாக மாவட்ட செயலாளர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
களத்தில் மாநாட்டுப் பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து, கடந்த 20 நாள்களாக இரவு, பகல் பாராமல் உழைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
அவருக்குத் துணையாக களத்தில் நின்று பணியாற்றிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், சேலம் கார்த்தி மற்றும் வைத்தி, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை உள்ளிட்ட அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆந்திர மாநிலத்திலிருந்து இந்த மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் கொல்லு ரவீந்திரா, வன்னியகுல ஷத்திரிய கார்ப்பரேசனின் தலைவர் சி.ஆர்.இராஜன், கர்நாடகத்திலிருந்து பங்கேற்ற முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மராட்டியம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தும், மலேஷியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து பங்கேற்ற அனைத்து சொந்தங்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அலை அலையாய் திரண்டு வந்து மாநாட்டைச் சிறப்பித்த பாட்டாளி சொந்தங்களுக்கும் எனது கோடானுகோடி நன்றிகள்.
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டின் முதன்மை நோக்கம் சமூகநீதி தான். அதை வலியுறுத்தி தான் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்;
அதனடிப்படையில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; அதேபோன்று அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2% உயர்த்த வேண்டும்; இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும்;
மேலும் தனியார் துறை மற்றும் உயர்நீதித் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து சமூகங்களுக்கும் நிதி அதிகாரம் கொண்ட வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்; மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும்;
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; வளர்ச்சிக் குறியீடுகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கான முழக்கங்கள் இந்த மாநாட்டில் எழுப்பப்பட்டுள்ளன.
ஏழரை கோடி மக்களின் இந்த உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொண்டு அதனடிப்படையில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஆணையிட வேண்டும்.
அதனடிப்படையில் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதுடன், வன்னியர்களுக்கும், மற்ற அனைத்து சமுதாயங்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
பட்டியலின மக்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் அளவை மேலும் 2% உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதேபோல், கல்வி, வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு மற்றும் கிரீமிலேயரை அகற்றுதல், தனியார்துறை மற்றும் உயர்நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பவுர்ணமி சிறப்பு பூஜையையொட்டி வள்ளி, தேவசேனா, சமேத கல்யாண முருகனுக்கு அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.
- விழாவில் 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர், வள்ளி, தேவசேனா, சமேத கல்யாண முருகன் சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 7மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை வீரவாஞ்சிநகர் திருவிளக்கு பூஜை குழுவினர் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு, சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
- கருப்பசாமி, பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள புளியறை வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் மாதாந்திர பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
விழாவில் கருப்பசாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது. அதனைத்தொடா்ந்து அன்னதானம் நடந்தது.
விழா ஏற்பாடுகள் ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளையின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






