search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arsonist"

    • மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த பழனிச்சாமி, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு சிறிய பாட்டிலில் பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்தி நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனிச்சாமி (வயது 38). கூலி தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி (35) என்ற மனைவியும், 2 பெண், 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள பழனிச்சாமி வழக்கம்போல் நேற்று இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.மீண்டும் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். சரஸ்வதி பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த பழனிச்சாமி, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு சிறிய பாட்டிலில் பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    வீட்டின் வெளியே பழனிச்சாமியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த சரஸ்வதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

    அங்கு பழனிச்சாமி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்த தகவலின் பேரில் வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×