என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை புது ஆற்றில் மிதந்து வந்த ஆண் பிணம்
    X

    தஞ்சை புது ஆற்றில் மிதந்து வந்த ஆண் பிணம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எம்.கே.மூப்பனார் சாலை அருகே புது ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் பிணத்தை கயிறால் மீட்டனர்.
    • பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள படித்துறை யில் இன்று மதியம் பொதுமக்கள் சிலர் குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்து கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த அவர்கள் பிணத்தை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இந்த நிலையில் எம்.கே.மூப்பனார் சாலை அருகே புதுஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் பிணத்தை கயிறால் மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

    ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இறந்தவ ருக்கு 40 வயது இருக்கலாம் என சந்தேகித்தனர்.

    இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்றில் குளிக்கும் போது மூழ்கி இறந்தாரா?

    தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார் ?

    என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×