search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reconciliation"

    • ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார்.

    சேத்தியா தோப்பு, ஆக .18-

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து ஆனைவாரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் அண்ணாதுரை மற்றும் கிராம மக்கள் 100- க்கு மேற்பட்டோர் இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது சுரங்க பாதை அமைக்க வேண்டும் என ஒன்று திரண்டு வந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதிஎம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை நகாய் திட்டஅலுவலரிடம் பேசி மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • இது பற்றி பண்ருட்டி போலீ சில் இவரது பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.
    • 75 பேர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை எடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் கடந்த 21 -ந் தேதி வீட்டில் இருந்த வர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது பற்றி பண்ருட்டி போலீ சில் இவரது பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காணாமல் போன இளம்பெண்ணை தேடி வந்தனர். அந்த இளம் பெண் பனங்காட்டுத் தெருவை சேர்ந்த வாலிபர் விஜயபாஸ்கர் (25)காதல் வலையில் சிக்கிஅவரது ஆசை வார்த்தைகளால் மயங்கி 21-ந் தேதி இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்த வர் விஜய் பாஸ்கருடன் விழுப்புரம் சென்று திரு மணம் செய்து கொண்டு நேற்று பண்ருட்டி போலீஸ் நிலையம் வந்து ஆஜரானார்கள். அவர்களை பண்ருட்டி இன்ஸ்பெக்டர் க ண்ணன், பண்ருட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரித்தனர். அவர்களிடம் பெண்ணின் உறவினர் மற்றும் பெற்றோர்களுடன் பேசிப் பார்த்தனர்.

    நான் திருமணம் செய்து கொண்டேன். விஜய பாஸ்கருடன் தான் செல்வேன் என்று எழுதிக் கொடுத்து விட்டு சென்றார்கள். உறவினர் மற்றும் பெற்றோர்கள் பெண்ணை வாலிபருடன் செல்ல விடா மல்விடாமல் தடுத்த போது போலீசார் விலக்கி விட்டு 2பேர்களை யும் அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் வேண்டும் என்று என் மகளை அனுப்பி வைத்து விட்டார்கள். நாங்கள் இன்னும் ஒரு மணி நேரம் எங்கள் மகளுடன் பேசி இருந்தால் எங்கள் மகள் எங்களுடன் வந்திருப்பார் என்று என்று கூறி பண்ருட்டி4 முனை சந்திப்பில் பெண்ணின் பெற்றோர்கள் தலைமை யில் 75 பேர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா பேச்சு வார்த்தை நடத்தினார்.நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின் சாலை மறியலில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர்.
    • எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தை மையமாக வைத்து இணைக்கும் சென்னை- கன்னியாகுமரிதொழில் தட திட்ட புதியசாலை அமைக்கும்பணி கடந்த 2021 -ம் ஆண்டு தொடங்கிவேகமாக நடந்து வருகிறது. இந்த புதிய சாலைபணிக்காக நிலம் கையகப்படுத்தும்பணி மற்றும் இழப்பீடு தொகைவழங்கும்பணிகள் முழுமையாக நடந்துமுடிந்தநிலையில் அண்ணாகிராமம் ஒன்றியம் கனிசபாக்கம் ஊராட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர். புதிய போர் போடும் பணி தாமமமானதால் மேல்நிலை நீர்த்தேக்க.தொட்டியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிதகவல்அ றிந்ததும்அங்கு விரைந்து வந்த அண்ணா கிராமம் தி.மு.க. ஒன்றியசெ யலாளர்வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்திகி ராமபொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,என்ஜி னீயர்கள் சுந்தரி, ஜெயந்தி, ஏழிலரசி, நில எடுப்புதனி தாசில்தார் தமிழ்ச்செல்வி, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், அண்ணா கிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, மீரா கோமதி, கணிசபாக்கம்பஞ்சாயத்து தலைவர்திருநாவுக்கரசு ஆகியோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு மாத காலத்துக்குள் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் நிறைவு பெற்றபிறகு புதிய சாலை அமைக்கும் பணிக்கான பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்ற பொதுமக்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அ.பள்ளப்பசேரி கிராமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது இஸ்லாமியர்கள் சார்பில் சந்தன காப்பு மரியாதை செய்யப்பட்டது. இறுதியாக நத்தம் அய்யனார் கோவில் முன்பு பொன் ஏர்விடும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிகாண ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் ஜெய்கணேஷ். செல்லத்துரை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.

    • வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமரசமாக முடிக்க பரிசீலனை.
    • மொத்தம் 809 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் ஆணைப்படி மற்றும் செயலாளரும் சார்பு நீதிபதியுமான சுதா அறிவுரைகளின் படி கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்ப–ட்டிருந்தது. அதில் முதல் அமர்வில் கூடுதல் மாவட்ட, விரைவு நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் தலைமையில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி புவியரசு, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் இரண்டாவது அமர்வில் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சண்முகப்பிரியா தலைமையில், முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேசப்பெருமாள், கூடுதல் மாவட்ட உரிமையியல் ரஞ்சிதா திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சிவபழனி தலைமையில், கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்:1-ன் நீதிபதி பாரதிதாசன், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்.ரகுவீரன் ஆகியோரது பங்கேற்பில் மொத்தம் 809-வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்பநல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 479-வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது. அதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு ஏற்பட்டு மொத்தம் ரூ.1,62,27,899/- வசூல் ஆகியது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், குணசீலன் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • கடலாடி அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலச்செல்வனூர் ஊராட்சிக்குட்பட்ட தேரங்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இந்த கிராமத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை தற்போது சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் வந்து செல்ல மறுப்பதால் சிகிச்சை பெற முடியாமல் 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனங்கள் இந்த சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    இந்த பகுதியில் பஸ் வசதி கிடையாது. கடலாடியில் இருந்து தேரங்குளம் கிராமத்திற்கு செல்ல 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது இரவு நேரங்களில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் கிராமத்திற்கு செல்ல மறுத்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தற்போது வரை சாலையை சீரமைக்கவில்லை. விரைவில் சாலையை சரி செய்யாத பட்சத்தில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்து போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    திருவள்ளூர் எம்.பி. தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    திருநின்றவூர்:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

    அப்போது திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டதும், பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு உட்பட்டதும் ஆன திருநின்றவூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் (எண் 195) வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டது.

    அப்போது மொத்தம் 858 ஓட்டுகள் பதிவானதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் இறுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்த்த போது திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்கு 27 வாக்குகளும், பூந்தமல்லி எம்.எல்.ஏ. தொகுதிக்கு 37 வாக்குகளும் கூடுதலாக பதிவாகி இருந்தன.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 195-ல் மறுவாக்குப்பதிவு இன்று (19-ந் தேதி) நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.


    அதன்படி மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்குப்பதிவு நேரம் தொடங்கியது முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காலையிலே ஏராளமானோர் வாக்களித்தனர்.

    அவர்களுக்கு திருவள்ளூர் பாராளுமன்றதொகுதி, பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்ததால் 2 ஓட்டு போட்டனர். அவர்களது இடது கை நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

    இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 513 ஆண் வாக்காளர்களும், 536 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1049 பேர் உள்ளனர்.

    மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×