என் மலர்
நீங்கள் தேடியது "Kuki"
- மணிப்பூரில் மெய்தி- குதி பிரிவினருக்கு இடையில் 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது.
- வன்முறை நடைபெற்று 2 வருடங்கள் நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில் போராட்டத்திற்கு வலியுறுத்தல்.
மணிப்பூரின் சில பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களையும் மே 3ஆம் தேதி மூட வேண்டும் என்று இரண்டு குக்கி-சோமி மாணவர் அமைப்புகள் மக்களை வலியுறுத்தியுள்ளன.
இனக்கலவரம் வெடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், மே 3, 2025 அன்று சோமி மாணவர் கூட்டமைப்பு (ZSF) மற்றும் குக்கி மாணவர் அமைப்பு (KSO) ஆகியவை அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடி மௌனமாக நாளைக் கடைப்பிடிக்க" அனைவரையும் வலியுறுத்தியுள்ளன.
மேலும் "அனைவரின் வீடுகளிலும் கருப்புக்கொடிகளை ஏற்ற வேண்டும். தியாகிகளின் கல்லறையில் ஒரு கூட்டு பிரார்த்தனையும், சூரசந்த்பூர் மாவட்ட தலைமையகத்தில் உள்ள நினைவுச் சுவரில் ஒரு பொதுக் கூட்டமும் நடத்தப்படும்" என்றும், பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டன.
மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தினர் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். பெரும்பான்மை சமூகத்தினரான மெய்தி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்ப தெரிவித்து 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி குகி சமூகத்தினர் மிகப்பெரிய பேரணியை நடத்தினர். பேரணியின்போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இனக் கலவரமாக மாறியது.
இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் முதலமைச்சர் என் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட மாநில சட்டமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பழங்குடியினத் தலைவர்கள் அமைப்பு (ITLF) மே 3 ஆம் தேதி "பிரிவினை தினமாக" அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. குகி-சோ சமூகங்களை ஆழமாகப் பாதித்த இன மோதலில் உயிரழந்தவர்களின் நினைவுக்கூரும் நாளாக இருக்கும் எனத் தெரிவிததுள்ளது.
இம்பால் பள்ளத்தாக்கை அடிப்படையான கொண்டு மெய்தி சமூக அமைப்பான COCOMI, மே 3ஆம் தேதி மக்கள் அனைவரும் அனைத்து பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு, குமான் லாம்பாக் மைதானத்தில் மாநிலத்தில் எதிர்காலம் குறித்த ஆலோசனை பொதுக்கூட்த்தில் கலந்து கொள்ள வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- மணிப்பூர் கலவரத்தில் 180 பேர் உயிரிழந்தனர்; 300 பேர் காயமடைந்தனர்
- தற்போது வரை மணிப்பூருக்கு பிரதமர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 அன்று இரு பிரிவினருக்கிடையே வெடித்த மோதல் கலவரமாக மாறி நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. கலவரத்தில் இரு பிரிவினருக்கும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் சுமார் 180 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். பல குடும்பங்கள் வன்முறைக்கு பயந்து மணிப்பூரை விட்டு அண்டை மாநிலங்களுக்குள் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டது.
கலவரத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்த சில வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வருகின்றன. அத்தகைய ஒரு வீடியோவில், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் அழுகின்ற ஒரு கைக்குழந்தையை வைத்து கொண்டு, கணவனை இழந்த பெண் ஒருவர் கணவரின் உடலை கண்டு கதறியழும் காட்சிகள் காண்போரின் இதயத்தை கனக்க செய்கிறது.
சுமார் 4 மாத காலமாக ஒரு மாநிலத்தில் உயிர்பலி தொடரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பாராளுமன்றத்திலோ பொதுவெளியிலோ கருத்து ஏதும் தெரிவிக்காததும், அம்மாநில மக்களை வந்து சந்திக்காததும், வீடுகளையும், உடைமைகளையும், சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற கூட வராததும், அவர்களுக்கு நஷ்ட ஈடாகவும் ஏதும் அறிவிக்காததும் அகில இந்திய அளவில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வில் மோடிக்கு அடுத்து நம்பர் 2. இடத்தில் உள்ளவருமான அமித் ஷா இதுவரை பாதிக்கப்பட்ட இரு இனத்தை சேர்ந்த மக்களையும் சந்திக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அம்மாநிலத்தின் ஆளும் பா.ஜ.க. முதல்வர் பிரேன் சிங் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால்தான் நிலைமை கை மீறி போனதாக விமர்சிக்கும் மக்கள், உணர்வுபூர்வமான ஒரு பிரச்சனையை அலட்சியமாக கையாளத்தான் அவர் முதல்வாரானாரா என கேட்கின்றனர்.
- நேர்காணலில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
- கலவரம் நடந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று பாரக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் அவர்மீது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.
பிரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியா செய்தி ஊடக நேர்காணலில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் இனக் குழுக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்தது வருகிறது.
மெய்தேய்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சினர். மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தின்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுவரை இந்த கலவரத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயாத நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மணிப்பூரில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கலவரக்காரர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி போலீஸ் உதவியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.கலவரம் நடந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று பாரக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் அவர்மீது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு இடையில் PTI செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அமித்ஷா, மணிப்பூரில் மெய்தேய் - குக்கி இனக்குழுக்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மத்தியில் உள்ள பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடந்து பேசிய அவர், இதை மோதல் மற்றும் கலவரமாக மட்டும் பார்க்கக்கூடாது. இது இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்சனை, இதற்கு வலுக்கட்டாயமாக எந்த ஒரு தீர்வையும் ஏற்படுத்த முடியாது. மிகவும் கவனமாக கையாள வேண்டிய பிரச்சனை இது. மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

- மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியானது.
- மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி பவன் வளாகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும். மணிப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைதி நிலவியது. அங்கு துப்பாக்கி கலாச்சாரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால் அங்கு மீண்டும் வன்முறை உருவாகியுள்ளது. மணிப்பூரில் நிலவும் சூழ்நிலையை முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் இனக் குழுக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்து வருகிறது.
மெய்தேய்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சினர். மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தின்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுவரை இந்த கலவரத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயாத நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
- 10 குகி எம்.எல்.ஏ.-க்கள் கடந்த இரண்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெற்ற கூட்டம் 11-வது நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 31-ந்தேதி முதல் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை மணிப்பூர் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் 10 குகி-சோ (Kuki-Zo) எம்.எல்.ஏ.க்களை பங்கேற்கும்படி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பேன் என மணிப்பூர் முதல்வர் பிரேண் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் ஒத்துழைப்புக்கு தயாராக இருக்கிறோம் என்றார்.
இரண்டு மந்திரிகள் உள்பட 10 குகி எம்.எல்.ஏ.-க்கள் கடந்த இரண்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. மணிப்பூரில் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையில் நடைபெற்ற வன்முறை காரணமாக கலந்து கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தொடர், கூட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதில் குகி-சோ எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் 5-வது கூட்டத்தொடர் பிப்ரவரி 28-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை நடைபெற்றது.
நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்ல இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து நடைபெறும் முதல்வர்கள் கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறோம். மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை எடுத்துரைத்து, தற்போது நிலவும் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பேன். நேர்மறையான முடிவுகள் ஏற்படும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றார்.
ஜிரிபாம் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற தீவைப்பு சம்பவம் குறித்து கூறுகையில் "நான் விசாரணை நடத்தினேன். இரண்டு சமூகத்தினரின் தலைவர்களுடன் பேசினேன். இரண்டு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது வன்முறையை நிலைநிறுத்த முயல்பவர்களின் வேலையாகத் தெரிகிறது" என்றார்.
கடந்த புதன்கிழமை ஆளில்லா வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் வன்முறை வெடித்தபோது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் வீடு ஆளில்லாமல் இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.
- குகி கிளர்ச்சி குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை தொடங்க வேண்டும்.
- மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம்.
மணிப்பூரில் கடந்த வாரம் ஆறு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். குகி கிளர்ச்சிக்குழு பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திச் சென்று 7 நாட்களில் ஆறு பேரையும் கொலை செய்தது. இதனால் மணிப்பூரில் தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பாக அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். மூன்று வழக்குகளை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.-க்கள் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த நிலையில் மணிப்பூரில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 27 எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குகி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை (mass operation) எடுக்கப்பட வேண்டும். குகி கிளர்ச்சிக்குழுவை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நவம்பர் 14 தேதியிட்ட உத்தரவின்படி AFSPA உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்த தீர்மானத்தில் குறிப்பிட்டவை நடைமுறை படுத்தப்படவில்லை என்றால் மணிப்பூர் மக்களுடன் ஆலோசனை நடத்தி அதன்பின் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும் மாநில அரசும் விரைவில் எடுக்கும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் ஏழு எம்.எல்.ஏ.-க்கள் மருத்துவம் தொடர்பான காரணங்களை கூறி கலந்து கொள்ளவில்லை. 11 எம்.எல்.ஏ.க்கள் காரணம் ஏதும் கூறாமல் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- இன்று முதல் மக்கள் அனைத்து சாலைகளிலும் சுதந்திரமாக செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு.
- மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து பலத்த பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது.
மணிப்பூரில் கடந்த 2023-ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் சொந்த இடங்களில் இருந்து வெளியேறினர். இந்த வன்முறைக்கு சுமார் 250 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வன்முறை காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் மாநில பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு வருகிற 8-ந்தேதி (இன்றுமுதல்) முதல் அனைத்து சாலைகளும் திறக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அனைத்து சாலைகளிலும் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 8-ந்தேதியான இன்று மணிப்பூர் மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தொடங்கியது.
சேனாபதி மாவட்டத்திற்குச் செல்லும் பேருந்து கக்போக்பி மாவட்டத்தின் காம்கிபாய் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது குகி போராட்டக்காரர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது வாகனத்திற்கு பாதுகாப்பாக சென்ற பாதுகாப்புப்படையினர் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசியதுடன் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.
குகி பிரிவினர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தனி நிர்வாகம் வேண்டும். அதுவரை சுதந்திரமான நடமாட்டத்தை விரும்பவில்லை என போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு பேருந்து இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.