search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேத்தியாதோப்பு அருகே மேம்பாலம் அமைக்க கோரி  ஒன்று திரண்ட பொதுமக்கள்: அருண்மொழித் தேவன் எம்.எல்.ஏ. சமரசம்
    X

    பொதுமக்களிடம் அருண்மொழித் தேவன் எம்.எல்.ஏ. பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.

    சேத்தியாதோப்பு அருகே மேம்பாலம் அமைக்க கோரி ஒன்று திரண்ட பொதுமக்கள்: அருண்மொழித் தேவன் எம்.எல்.ஏ. சமரசம்

    • ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார்.

    சேத்தியா தோப்பு, ஆக .18-

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து ஆனைவாரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் அண்ணாதுரை மற்றும் கிராம மக்கள் 100- க்கு மேற்பட்டோர் இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது சுரங்க பாதை அமைக்க வேண்டும் என ஒன்று திரண்டு வந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதிஎம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை நகாய் திட்டஅலுவலரிடம் பேசி மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×