search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுமன்னார்கோவிலில்செம்மண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்:பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி
    X

    நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு கொண்டு செல்லப்படும் செம்மண் லாரிகளால் காட்டுமன்னார்கோவில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

    காட்டுமன்னார்கோவிலில்செம்மண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்:பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

    காட்டுமன்னார்கோவிலில்செம்மண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்:பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

    கடலூர்:

    காட்டுமன்னார் கோவி லில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. சுற்றுவட்டார கிரா மத்திலிருந்து ஏராளமான மாணவர்கள் தினமும் இங்கு வந்து செல்வர், இது தவிர வட்டாட்சியர் அலு வலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பொது மக்கள் வந்து செல்வர். இதனால் காட்டுமன்னார் கோவில் நகரப்பகுதி அதி காலை முதல் இரவுவரை பரபரப்பாக காணப்படும்இங்குள்ள முக்கிய வீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் உள்ளன.

    கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் காட்டுமன்னார் கோவில் கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீரநல்லூர், மாமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து கிராவல் செம்மண் எடுக்கப்படுகிறது. இந்த கிராவல் செம்மண் டாரஸ் எனப்படும் பெரிய டிப்பர் லாரிகளில் இரவு பகலாக கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக நிடத்திற்கு ஒரு லாரி சாலையை கடந்து செல்கிறது.க்ஷஇதனால் ஏற்கனவே இருந்ததை விட போக்கு வரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. இது தொடர்பாக நாளேடுகளில் செய்தி வரும் போது போலீ சார் ஒப்பந்ததாரரை அழைத்து பேசுகின்றனர். ஒரிரு தினங்கள் பள்ளி, கல்லூரி நேரங்களில் லாரிகள் இயக்கப்படாது. பின்னர் தொடர்ந்து இரவு பகலாக லாரிகள் இயக்கப்படும்.

    எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், காட்டுமன்னார்கோவில் சாலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி நேரங்களில் கிராவல் மண் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்ய வேண்டுமென காட்டுமன்னார்கோவில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×