search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், புதைவடை மின்கம்பி பணியால் போக்குவரத்து பாதிப்பு
    X

    சீர்காழியில், புதைவடை மின்கம்பி பணியால் போக்குவரத்து பாதிப்பு

    • தரை வழியாக மின்கம்பி கேபிள் கொண்டுசெல்லும் பணி தொடங்கி நடை பெறுகிறது.
    • லாரிகளை மாற்று பாதையில் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீர்காழி:

    வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்தி லிருந்து ஆச்சாள்புரம் துணை மின்நிலையத்திற்கு புதைவ டைமின்கம்பி கொண்டு செல்வதற்காக வைத்தீஸ்வ ரன் கோயிலிருந்து சீர்காழி நகர் பகுதி வழியாக ஆச்சாள்புரம் துணை மின்நிலை யத்திற்கு பூமிக்கு அடியில் தரை வழியாக மின்கம்பி கேபிள் கொண்டுசெல்லும் பணி தொடங்கி நடை பெறுகிறது.

    இந்த பணிக்காக சாலை யோரம் ஜெசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடை பெறுகிறது.

    இந்த பணியில் தோண்டப்படும் மண் சாலை யோரம் கொட்டி வைத்து நடைபெறுவதால் சாலை குறுகி பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இதோடு புறவழிச்சாலை பணிக்காக அதே வழிதடத்தில் லாரிகளில் மண் ஏற்றி செல்லும் லாரிகளும் சென்று வருவதால் பள்ளி நேரங்களில் வாகனஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    ஆகையால் போக்குவரத்து காவல் துறை யினர் மின் புதைகம்பி பணிகள் நிறைவ டையும் வரை கனரக வாகனங்கள், லாரிகளை மாற்று பாதையில் இயக்கிட பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×