ஓசூர் பகுதியில் நாளை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

3000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சுமார் 2000 லாரிகள் ஓடாது.
ஓசூர் பகுதியில் நாளை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
Published on

ஓசூர்:

தென்னிந்திய மோட்டார் போக்குவரத்து சங்க பொது செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா நேற்று ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதி கிரஷர் உரிமையாளர்கள் ஜனவரி 1- ந் தேதி முதல் 1 டன்னுக்கு 100 ரூபாய் அதிகமாக கொடுத்தால்தான் ஜல்லி கற்கள் மற்றும் எம். சாண்ட் கொடுப்போம் என்று அறிவித்துள்ளனர். ஒரே தடவையில், ஒரு டன்னுக்கு 100 ரூபாய் உயர்த்தியது லாரி உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாளைக்கு லாரி உரிமையாளர்கள் 30 டன் ஜல்லிக்கற்கள் ஏற்றி சென்றால், 3 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இருந்தபோதிலும் கிரஷர் உரிமையாளர்களிடம் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு டன் ஜல்லிக்கு 80 ரூபாய் கொடுப்பதாக ஒப்புக் கொண்டோம்.

ஆனால் கிரஷர் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் இருந்து தவறி விட்டார்கள். எங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கை யை அவர்கள் மீறிவிட்டார்கள், இந்த விலை உயர்வு காரணமாக ஓசூர் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்கள், 3000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கிரஷர் உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு வரும் வரை ஓசூர் மற்றும் ஆனேக்கல் பகுதிகளை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் நாளை (திங்கட்கிழமை, முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

எந்த ஜல்லி பாரமும் ஏற்றக் கூடாது. லாரிகளை வீட்டின் முன்புறமோ அல்லது செட்டுகளில் நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை நிறுத்த அறிவிப்பின்படி, சுமார் 2000 லாரிகள் ஓடாது, ஒரு நாளைக்கு 40,000 டன் அளவில் வர்த்தகம் இருக்காது.

இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com