search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramadan fasting"

    • பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
    • மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், "உதவுதல் நம் முதல் கடமை" என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரிச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததுடன், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். 

    • ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.
    • நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாதத்தின் இறுதி நாளில் சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் வகையில் ரமலான் பண்டிகை கொண்டாட ப்படுகிறது.

    அதன்படி, பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.

    நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும், வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நோன்பு இருப்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும்.
    • ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.

    இஸ்லாமியர் களிடத்தில் நோன்பு இருப்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும். அதிலும் குறிப்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.

    `நோன்பு' எனும் வார்த்தை அரபு மொழியில் `ஸவ்மு' என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய பொருள் `தடுத்துக்கொள்ளுதல்' ஆகும். அதாவது, சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்து மறையும் நேரம் வரையில் எதையும் சாப்பிடாமல், தீய செயல்களில் ஈடுபடாமல் உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் இறையச்சத்துடன் இருப்பதே ரமலான் நோன்பு ஆகும்.

    நோன்பின் மாண்புகள் குறித்தும், சிறப்புகள் பற்றியும் திருக்குர் ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமான நபி மொழிகளிலும் ரமலான் நோன்பின் சிறப்புகள் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

    திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது: "நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்". (2:183)

    இந்த ரமலான் மாதத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் உலக மக்களுக்கு நேர்வழிகாட்டியாக விளங்கும் திருக்குர்ஆன் அருளப்பட்டதும் ஒரு ரமலான் காலத்தில் தான்.

    இதையே திருக்குர்ஆன் (2:185) இவ்வாறு கூறுகின்றது: "ரமலான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது".

    ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்த நபி மொழிகள் வருமாறு:

    `எவர் இறை நம்பிக்கையுடனும்' மறுமையின் நற்கூலியைப்பெறுகின்ற எண்ணத்துடனும் ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

    `நிச்சயமாக சொர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது. அது `ரய்யான்' என்று சொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்'.

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், சைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'.

    `அல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பு நோற்றவரின் முகத்தை நரக நெருப்பை விட்டு எழுபது ஆண்டு கால அளவுக்கு தூரமாக்காமல் அல்லாஹ் விடுவதில்லை''.

    `நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள்.

    அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:- ``நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என்னை சுவனத்தில் நுழைவிக்கக்கூடிய ஒரு செயலைக்கொண்டு எனக்கு தாங்கள் ஏவுங்களேன் என வேண்டினான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீர் நோன்பை பற்றிப் பிடித்துக் கொள்வீராக. ஏனெனில் நோன்புக்கு நிகர் வேறெதுவும் கிடையாது என பதில் கூறினார்கள். திரும்பவும் நான் நபியிடம் வந்து முறையிட, அண்ணலார் எனக்கு அதே பதிலைச் சொன்னார்கள்''. (நூல்: அஹ்மது)

    நோன்பு இருக்கும் ரமலான் காலத்தில் அதிகமாக தான தர்மங்கள் செய்ய வேண்டும். மேலும் `ஜகாத்' எனப்படும் தர்மத்தையும் ரமலானில் நிறைவேற்றுவது கடமையாகும். நமது வருமானத்தில் குறிப்பிட்ட அளவு தர்மம் செய்வது ஜகாத் ஆகும்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:- இறை வழியில் ஹலால் (ஆகுமான) செல்வத்தையே செலவு செய்யுங்கள். தூய்மையான பொருட்களையே இறைவன் ஏற்றுக்கொள்கிறான். 'இறை நம்பிக்கை கொண்டோர்களே, நீங்கள் சம்பாதித்த பொருட்களில் இருந்தும், பூமியில் நாம் உங்களுக்கு வெளிப்படுத்தி தந்தவற்றிலும் சிறந்தவற்றை (தூய்மையானவற்றை- இறைவழியில்) செலவு செய்யுங்கள். (திருக்குர்ஆன் 2:267)

    நோன்பு இருக்கும் போது மனது கட்டுப்பாடு நிலைக்கு வந்து தீய செயல்களில் இருந்து நம்மை விலக்கி நல்வழியில் செலுத்துகிறது. நம்மில் இருக்கும் கோபத்தினை முற்றிலும் இந்த நோன்பு குறைக்கிறது.

    உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, நோன்பு மேற்கொள்வதால் அது உடல் கழிவுகள், ரத்தக்குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும். தொண்டை, இதயம், ரத்தத்தை தூய்மைப்படுத்தும்.

    ஏனென்றால், உணவு சாப்பிடாத போது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே உடலானது சுத்தப்படுத்திக்கொள்கின்றன.

    ரமலான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் உள்ளது.

    `எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்தில் இருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்' என்பது நபி மொழியாகும். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் பார்ஸி (ரலி), நூல்: பைஹகி).

    நோன்பின் மகிமையை உணர்வோம், நன்மைகள் பெறுவோம்.

    • கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மத நல்லிணக்க புனித ரமலான் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

    கீழக்கரை ரோட்டரி சங்கத்தலைவர் சுல்தான் சம்சூல் கபீர் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட டவுன் தலைமை ஹாஜி அல்ஹாஜ் சலாகுதீன் ஆலிம், ஓய்வு பெற்ற ஆசிரியர் காசி கணேசன், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் ஆகியோர் நோன்பின் மகிமை பற்றி பேசினர்.

    இதில் கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானஸ் ஆபிதா, சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி மேற்பார்வையாளர் சாம்பசிவம், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கே.ஆர்.டி.கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர்கள் மீரான்அலி, பயாஸ், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் ஷேக் தாவூது, பேராசிரியர்கள் மரியதாஸ், பாலகிருஷ்ணன், எபன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    ரோட்டரி சங்க செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பொருளாளர் சிவகார்த்திக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ரம்ஜான் நோன்பு திறக்க இளைஞர்கள் இலவசமாக உணவளிக்கின்றனர்.
    • இளைஞர்களை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை ரத்த உறவுகள் அமைப்பு மற்றும் சதக்கத்துல் சுன்னா அறக்கட்டளை சார்பில் சஹர் நேர உணவு தயார் செய்ய முடியாமல் இருக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆலிம்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், வெளியூரில் இருந்து தங்கி பணிபுரியும் ஊழியர்கள், அரசு மருத்து வமனையில் உள்நோயாளிகளுக்கு துணை இருப்ப வர்கள், செவிலியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் ரமலான் நோன்பு வைப்ப தற்கான சஹர் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனர் செய்யது அகமது கபீர் கூறியதாவது:-

    12 பேர் கொண்ட இளைஞர் குழு மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 600 முதல் 700 பேர் வரைக்கும் இலவச உணவு வழங்குகிறோம்.

    பெரும்பாலும் நேரில் வந்து உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மருத்துவ மனையில் இருப்பவர்கள், வீடுகளில் ஆண் உதவி இல்லாத தாய்மார்களுக்கு எங்கள் அமைப்பின் இளைஞர்கள் வீடு தேடி போய் உணவை வழங்கி வருகின்றனர்.

    இலவச உணவு வழங்கு வதில் நாளொன்றுக்கு ரூ, 25 ஆயிரம் முதல் ரூ. 28 ஆயிரம் வரை செலவாகிறது. எங்கள் அமைப்பில் உள்ள இளைஞர்கள் தங்களால் முடிந்த பொருளாதார உதவியை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை.

    நல்லுள்ளம் கொண்ட ஈகையாளர்கள் தங்களால் முடிந்த உதவியை பணமாகவோ, உணவுக்கான பொருளாகவோ வழங்கி னால் ரமலான் முழுவதும் இலவச உணவு வழங்க உதவியாக இருக்கும் என்றார்.

    அமைப்பு நிர்வாகிகள் பாஹிம், ஹமீது, சாலிம், நுஸைர், ஜியாவுல், ஷஹாதத், பாக்கர், முஜீபு ரஹ்மான், காசீம், ஹம்தான், ஜெய்னுலாப்தீன் இவர்களுடன் கீழக்கரை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் இணைந்து இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை உணவு வழங்கும் பணியை சேவை யாக செய்து வருகின்றனர்.

    தூய பொதுசேவைகளின் மூலம் சிறந்த எடுத்துக் காட்டாக வாழும் இளை ஞர்களை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகி ன்றனர்.

    • நேற்று இரவு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டதுடன், அதிகாலை முதல் நோன்பு தொடங்கினர்.
    • நோன்பு காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் திருக்குரான் அனைத்தையும் வாசிக்கவேண்டும்.

    முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும். இந்த ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

    மேலும் இந்த நாட்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் கடமையாகும். இந்த உதவியை தான் சகத் என்கிறார்கள். மேலும் நோன்பு காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் திருக்குரான் அனைத்தையும் வாசிக்கவேண்டும். இந்த காலக்கட்டத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் வெளியிட்ட அறிவிப்பில்,

    தமிழகம் முழுவதும் 22-ந் தேதி பிறை தென்படாததால் நேற்று மாலை ரமலான் மாத முதல் பிறையாக கணக்கிடப்பட்டு இரவு தொழுகை நடைபெறுகிறது. நோன்பு நோக்கவும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி (சனிக்கிழமை) இரவு பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள் என்றும், 12-ந்தேதி மரீப் முதல் தொடங்க உள்ளது. 18-ந்தேதி மாலை பெரிய இரவு என அழைக்கப்படுகின்ற லைலத்துல் கதர் இரவு என்றும், ரமலான் ஈத் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சந்தேக நாள் என நினைவு படுத்தப்படுகிறது. அனைவரும் ரமலான் மாதத்தில் பகலில் நோன்பு வைத்து இரவில் இபாதத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று இரவு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டதுடன், அதிகாலை முதல் நோன்பு தொடங்கினர்.

    • ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.
    • ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    சென்னை :

    ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், 24-ந்தேதி (நாளை) முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் வெளியிட்ட அறிவிப்பில், "ரமலான் மாதப்பிறை நேற்று தமிழ்நாட்டில் எங்கும் தென்படவில்லை. இதனால் ரமலான் நோன்பு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும்" என்று கூறியுள்ளார்.

    நமது தேவைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை கொண்டவன் இறைவன் மட்டுமே. எனவே எதையும் இறைவனிடமே கேட்போம். அவனருளைப்பெறுவோம்.
    புனிதமான இந்த ரமலானில் நாம் செய்யக்கூடிய நன்மையான அமல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு செய்தால் இறைவனின் நற்கூலியைப்பெறலாம். நரகத்தை விட்டும் பாதுகாப்பும் பெறலாம். நாம் செய்யவேண்டிய அமல்களில் குறிப்பிடத்தக்கது தொழுகை, கடமையான ஐந்து நேரத் தொழுகைகளை குறித்த நரத்தில் இமாம் ஜமாத்துடன் சேர்ந்து தொழுவது சிறப்பு மிக்கது. இதுகுறித்து திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:

    மேலும் பொறுமையை கொண்டும், தொழுகையைக்கொண்டும (அல்லஹ்விடம்) உதவி தேடுங்கள் (திருக்குர்ஆன்2:45)

    நம்பிக்கை கொண்டோரே பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் (திருக்குர்ஆன் 2:153)

    தொழுகையை நிலைநாட்டுவதுடன் திருக்குர்ஆனையும் ஓதிவர வேண்டும். குறிப்பாக திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இந்த ரமலான் மாதத்தில் அதை அதிகமாக ஓதிவர வேண்டும். ஏன்என்றால் மறுமைநாளில் நமக்கு சொர்க்கத்தை பரிந்துரை செய்யும் வல்லமை கொண்டது திருக்குர்ஆன்.

    திருக்குர்ஆனை முறையாக ஓதி வந்தவர் மறுமைநாளில் இறைவனை சந்திக்கும் போது அவருக்காக அவர் ஓதிய திருக்குர்ஆன் சிபாரிசு செய்யும். இறைவா இந்த மனிதன் திருக்குர்ஆனை ஓதிக்கொண்டே இருந்தான். இரவில் தூக்கத்தை விட்டும் விலகி இருந்து இவன் திருக்குர்ஆன் ஓதினான். எனவே இவனுக்கு சொர்க்கத்தை அளிப்பாயாக என்று திருக்குர்ஆன் தனது சிபாரிசை தெரிவிக்கும். இது தவிர சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடையும் இந்த திருக்குர்ஆன் வழிகாட்டும்.

    ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய) தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைக் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது என்று திருக்குர்ஆன்(2:185) குறிப்பிடுகிறது.

    நமக்கு எது தேவை என்றாலும் இறைவனையே அழைக்க வேண்டும், இறைவனிடமே கேட்க வேண்டும்.

    இது குறித்து திருக்குர்ஆன் (2:186) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    (நபியே) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றிக்கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன். ஆதலாம் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும்(அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.

    மற்றொரு வசனத்தில் நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள ரத்த நரம்பை விட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம் எனும் இறைவன் குறிப்பிடுகின்றான் ( திருக்குர்ஆன் 50:16)

    நமது தேவைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை கொண்டவன் இறைவன் மட்டுமே. எனவே எதையும் இறைவனிடமே கேட்போம். அவனருளைப்பெறுவோம்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை. 
    இறைவனின் நற்கூலியைப்பெற நாமும் இறைவன் மீது நம்பிகை கொண்டு, அவன் வகுத்தவழியில் வாழ்ந்து, தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளை நிறைவேற்ற முன் வருவோம்.
    முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்களுக்கிடையில் இருந்தபோது, ஒருவர் அவர்களிடம் வந்து ‘ஈமான் என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனுடைய சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும் மரணத்திற்குப்பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக்கூறினார்கள்.

    அடுத்து இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டதற்கு‘ இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீங்கள் இணையாகக் கருதாத நிலையில் அவனை வணங்குவதும், தொழுகையை நிலை நிறுத்தி வருவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தை வழங்கி வருவதும், ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும் என்ற கூறினார்கள்.

    அடுத்து இஹ்ஸான் என்றால் என்ன? என்று அவர் கேட்ட போது (இஹ்ஸான் என்பது ) அல்லாஹ்வை (நேரில்) காண்பதை போன்று நீர் வணங்குவதாகும். நீர்  அவனைப்பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மை பார்த்து கொண்டே இருக்கிறான் என்றார்கள்.

    அடுத்து உலகம் அழியும் நாள் எப்போது? என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதைப்பற்றி கேட்கப்பட்டவர் (நான்) அதைப்பற்றிக் கேட்கின்ற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களை பற்றி உமக்கு சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப்பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்: மேலும் கருப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக்கொண்டிருந்த மக்கள் உயர்ந்த் கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக்கொள்ளல்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிமாட்டார் என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

    நிச்சயமாக (உலக முடிவு) காலத்தை பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்) தான் இருக்கிறது. (திருக்குர்ஆன்31:34)

    பின்னர் அம்மனிதர் திரும்பிச்சென்றார். அவரை  அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரை காணவில்லை.

    அப்போது இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு  அவர்களின் மார்க்கத்தை கற்றுக்கொடுக்க வந்திருக்கிறார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உமர்(ரலி)

    இதுகுறித்து திருக்குர்ஆன்(2:277) வசனம் குறிப்பிடுகையில், ‘ பார் ஈமான் கொண்டு நற்கருமங்களை செய்து தொழுகையை நியமமாகக் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது: அவர்களுக்கு அச்சமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’ என்று தெரிவிக்கிறது.

    இறைவனின் நற்கூலியைப்பெற நாமும் இறைவன் மீது நம்பிகை கொண்டு, அவன் வகுத்தவழியில் வாழ்ந்து, தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளை நிறைவேற்ற முன் வருவோம்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    தவறு செய்யும் மனதினை இறைவன் மன்னிக்கும் குணம் கொண்டவனாகவே இருக்கின்றான். அவன் செய்யும் தவறுகள் தொடரும் போது சிறிய சிறிய தண்டனைகள் கொடுத்து அவனை எச்சரிக்கை செய்கின்றான்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் மிகவும் கிருபை நிறைந்தவன், மன்னிக்கும் குணம் கொண்டவன். அவன் மனிதர்களை படைத்ததே தன்னை வணங்க வேண்டும், தான் வகுத்த வழியில் வாழ்ந்து சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்குத்தான்.

    தவறு செய்யும் மனிதனை தண்டிக்க வேண்டும் என்பது இறைவனின் நோக்கம் அல்ல. மாறாக தான் படைத்த இந்த மனித இனம் தனது கட்டளைப்படி நடக்கிறதா? என்பதை சோதிக்கவே இந்த உலக வாழ்க்கையை மனித இனத்திற்கு இறைவன் கொடுத்துள்ளான்.

    இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘இறைவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்: உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு. மேலும் எவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்’(திருக்குர்ஆன் 69:2)

    இதனால் தான் நாம் செய்யும் தீமையான எந்த செயல்களுக்கும் உடனடி தண்டனை என்பது கிடையாது. ஏன்எனில் இறைவன் கூறுகிறான், ‘என் அருள், என் கோபத்தை முந்திவிட்டது’ என்று.

    தவறு செய்யும் மனதினை இறைவன் மன்னிக்கும் குணம் கொண்டவனாகவே இருக்கின்றான். அவன் செய்யும் தவறுகள் தொடரும் போது சிறிய சிறிய தண்டனைகள் கொடுத்து அவனை எச்சரிக்கை செய்கின்றான். அப்போதும் மனிதன் தன்னைமாற்றிக்கொள்ளவில்லை என்றால் இவ்வுலகிலும், மறுமையிலும் அவனுக்கு கடும் தண்டனை அளிக்கின்றான்.

    எனவே முதலில் இறைவன் தரும் எச்சரிக்கையை உணர்ந்து கொண்டு, அவன் குறைவான தண்டனை தரும் போதே நம்மை திருத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மறுமை நாளில் காத்திருக்கும் மிக மோசமான தண்டனையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும், நரகத்தில் இருந்தும் விடுதலை பெறலாம்.

    இதற்கு நாம் செய்ய வேண்டியது நமது வாழ்நாளில் இறைவணக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். நற்செயல்களை அதிகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு இந்த ரமலான் மாதம் நமக்கு வழிகாட்டுகிறது.

    ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி வாரி வழங்கினார்கள் என்பது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

    ‘இறைத்தூதுர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள்: ரமலான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல்(அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலான் மாதத்தில் ஒவ்வொர் இரவிலும் நபி(ஸல்) அவர்களை சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருநத) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக்காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களை சந்திக்கும் போது அவர்கள் மழைக்காற்றை விட அதிகமாக (மக்களுக்கு நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.

    புதிதமான இந்த ரமலானில் நாமும் வாரிவழங்குபவர்களாக மாறுவோம். பாவங்களை விட்டு விலகி நன்மைகளை நாளும் பெறுவோம்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    ஒரு மனிதன் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்றால் அவனிடம் கீழ்க்கண்ட 8 விஷயங்கள் இருக்க வேண்டும். இதில் 4 உள்ளம் சம்பந்தப்பட்டது. மீதி 4 உடல் சந்பந்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
    ஒருமுறை நபித்தோழர் அபூஹுரைரா(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘நாயகமே மறுமையில் உங்களின் பரிந்துரையின் மூலம் நற்பாக்கியம் பெறுபவர் யார்?’ எனக்கேட்டார்கள்.

    அதற்கு நபியவர்கள், ‘உமக்கு இருக்கும் பேராசையினால் இந்தக்கேள்வியை கேட்கிறீர்கள். உம்மைத்தவிர வேறு யாரும் இந்தக் கேள்வியை கேட்கமாட்டார்கள் என்பதை நான் அறிவேன்’ என்று கூறினார்கள். பின்னர் தொடர்ந்து என் பரிந்துரையின் மூலம் மறுமையில் நற்பாக்கியம் பெறுபவர்கள் யார் என்றால், எவர் உள்ளத்தூய்மையுடன் மனதாலும், உள்ளத்தாலும், இறைவன் ஒருவனே அவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவாரோ அவர் தான் என்றார்கள்.

    ஒரு மனிதன் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்றால் அவனிடம் கீழ்க்கண்ட 8 விஷயங்கள் இருக்க வேண்டும். இதில் 4 உள்ளம் சம்பந்தப்பட்டது. மீதி 4 உடல் சந்பந்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

    1. தெரிந்தோ, தெரியாமலோ பாவம் செய்து விட்டால், அதன்பிறகு இனிமேல் அந்த பாவத்தை செய்யமாட்டேன் உள்ளத்தால் உறுதி கொள்ள வேண்டும்.

    2. பாவத்தை விட்டு நீங்க வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி செய்த பின்னர் அதை மனதால் செயல்படுத்தவும் முன்வர வேண்டும்.

    3. இதையும் மீறி பாவம் செய்தால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற பயம் மனதில் ஏற்பட வேண்டும்.

    4. யார் மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்கிறார்களோ அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று இறைவன் கூறிஇருக்கிறான். அதன்படி பாவமன்னிப்பு கேட்கும் எனது பாவங்களும் இறைவனால் மன்னிக்கப்படும் என்று மனதில் உறுதியாக எண்ணம் கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட இந்த நான்கும் உள்ளம் சார்ந்தது. இனி உடல் சார்ந்த 4 விஷயங்கள்:

    5. ஏதேனும் பாவம் செய்து விட்டால், உடனே இறைவனிடம் பாவமன்னிப்பு பெற வேண்டும் என்று மனதில் முடிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் உடலை சுத்தம் செய்து பள்ளிவாசல் வரவேண்டும். அங்கு 4 ரக்அத்கள் தொழ வேண்டும்.

    6. தொழுகை முடிந்த பின்னர் 70 முறை ‘அஸ்தஃபிருல்லாஹ் ரப்பீ மின்குல்லி தன்பின்வ கதீஅதின் வஅதூபு இலைஹி’ என்று கூற வேண்டும். (இதன் பொருள் : ‘ எனது எல்லாப்பாவங்களில் இருந்தும் இறைவனிடம் இருந்து மன்னிப்பு கேட்கிறேன். நான் இறைவனின் பக்கமே மீண்டு விட்டேன்’ என்பதாகும்). அடுத்து ‘ சுப்ஹான ரப்பியல் அளீம் வபிஹம் திஹி’ என்று 100 முறை கூற வேண்டும்.

    7. தன்னால் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

    8. பாவ மன்னிப்பு வேண்டி ஒருநாள் நோன்பு இருக்க வேண்டும்.

    ஒருவன் இந்த எட்டு நிலைகளையும் சரியாக கடைப்பிடித்துவிட்டால் அவனது பாவமன்னிப்பு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்.

    இது குறித்து திருக்குர்ஆன் (11:114,115) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்’.

    எனவே இந்த புனிதமிகு ரமலானில் நல்லறங்களை அதிகம் செய்து இறைவனிடம் பாவ மன்னிப்பை பெற்று சுவனபதியில் இடம் பெற நான் அனைவரும் முயற்சி செய்வோம், ஆமீன்.

    வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

    (மனிதர்களே) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனை கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்)அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204)
    புனிதமான இந்த ரமலான் காலங்களில் மிக அதிகமாக திருக்குர்ஆன் ஓத வேண்டும். ஏன் என்றால் மறுமை நாளில் ஒரு மனிதருக்கு சிபாரிசு செய்யக்கூடிய அந்தஸ்து கொண்டவை நோன்பும், திருக்குர்ஆனும். இவை இரண்டும் மறுமைநாளில் அல்லாஹ்விடம் ‘இந்த மனிதன் நோன்பு வைத்து திருக்குர்ஆன் ஓதியதற்கு நாங்கள் சாட்சி கூறுகிறோம். இதற்காக இவனுக்கு நீ சொர்க்கத்தை அளிப்பாயாக’ எனறு இறைவனிடம் சிபாரிசு செய்யும்.

    சிறப்புகள் மிகுந்த திருக்குர்ஆன் ஒரு ரமலான் மாதத்தில் தான் இறக்கப்பட்டது. அந்த திருக்குர்ஆன் மீது நம்பிக்கை கொண்டு அதை ஓதி வருபவர்களுக்கு கிடைக்கும் பரிசு சொர்க்கம் ஆகும். இதை புறக்கணித்தவர்கள் நஷ்டம் அடைந்தவர் ஆவார். இது குறித்த வசனங்கள் வருமாறு:

    ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் -(என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது’. (திருக்குர்ஆன் 2:185)

    ‘எவர்களுக்கு நாம் வேதத்தை அருளியிருக்கின்றோமோ, அவர்கள் இவ்வேதத்தை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகின்றார்கள். இவர்கள் இதன் மீது (இந்தக்குர்ஆன் மீது உண்மையான உள்ளத்துடன்) நம்பிக்கை கொள்கின்றார்கள். இன்னும் எவர்கள் இதனைக் குறித்து நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கிறார்களோ அவர்களே உண்மையில் நஷ்டமைந்தவர்களாவர்’. (திருக்குர்ஆன் 2:212)

    ‘எவர்கள் தங்கள் இறைவனின் (திருக்குர்ஆன் என்னும்) தெளிவான அறிவைப்பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் (“ஈஸா”வுக்கு) அருளப்பட்டது (இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழி காட்டியாகவும் அருளாகவும் அருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக் கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சுவனபதிதான்.) இந்த (மூ)வகுப்பாரில் எவர்கள் இதனை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். (திருக்குர்ஆன் 11:17)

    (மனிதர்களே) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனை கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்)அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204)

    திருக்குர்ஆனை தொடர்ந்து ஓதி வருபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று  இறைவன் வாக்களித்துள்ளான். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அந்த சொர்க்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

    இம்மையில் எப்போதும் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த மனிதன் மறுமையில் சொர்க்கம் செல்வான். அப்போது  அந்த மனிதனிடம், இறைவனின் நல்லடியாரே, நீர் திருக்குர்ஆனை நிதானமாக ஓதியபடி சொர்க்கத்திற்கு செல். நீ ஓதும் திருக்குர்ஆன் வாசகங்களை எந்த இடத்தில் முடிக்கிறாயோ அவ்வளவு தூரும் உள்ள இடமும் உனக்குத்தான். இதுவே சொர்க்கத்தில் நீ தங்குமிடமாகும்.

    இந்த ரமலான் காலத்தில் அதிகமாக திருக்குர்ஆர்ஓதுவோம். சொர்க்கவாதியாக இறைவனின் அருளைப்பெறுவோம், ஆமீன்.

    வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை. 
    ×