search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolathur Constituency"

    • பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
    • மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், "உதவுதல் நம் முதல் கடமை" என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரிச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததுடன், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். 

    சென்னை மேயராக பதவி வகித்தபோது கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்ன? என்பது குறித்து சைதை துரைசாமி பட்டியலிட்டுள்ளார். #ADMK #SaidaiDuraisamy #KolathurConstituency
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொளத்தூர் இரட்டை ஏரி 100 அடி சாலை சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை மூலம், மேம்பாலம் கட்டுவதற்கு இன்றைய முதல்-அமைச்சர், அன்றைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம், பலமுறை விண்ணப்பம் கொடுத்து, நேரிடையாக பார்வையிடச் செய்து, சுமார் ரூ.48 கோடி செலவில் மேம்பாலம் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதேபோல், கொளத்தூர் - வில்லிவாக்கம் எல்.சி.1 சந்திக்கடவின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கு தடைகள் பல இருந்து கைவிடப்பட்ட இந்த திட்டம், 2012-2013 நிதிநிலை அறிக்கையில் என்னால் அறிவிக்கப்பட்டு, தற்போது சுமார் ரூ.58.5 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்படவுள்ளன. கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேம்பாட்டிற்காக கடந்த 25-10-2011 முதல் இன்று வரை சென்னை மாநகராட்சியால் ரூ.205 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டிலான 1,916 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    அதாவது, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 1,431 உட்புறச்சாலைகளில், 248 கான்கிரீட் சாலைகள் மற்றும் 943 உட்புற தார்சாலைகளை மேம்படுத்தும்பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பூங்கா, மாநகராட்சி கட்டிடம், பொதுக் கழிப்பிடம், மயானம், நடைபாதை, மழைநீர் சேகரிப்புத் தொட்டி போன்ற அபிவிருத்திப் பணிகளின் மேம்பாட்டிற்காக மொத்தம் ரூ.205 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டிலான 1,916 பணிகள் நடைபெற்றுள்ளது.

    மேயர் நிதியின் கீழ் ரூ.8 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் 34 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை, 2 உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிகள், 15 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள், குளம் அபிவிருத்தி செய்யும் பணிகள், பள்ளிக்கட்டிடம் அபிவிருத்தி செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன.

    பேருந்து சாலைகள் துறையின் கீழ் ரூ.21 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 18.3 கிலோ மீட்டர் நீளத்தில், 34 பேருந்து சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 16 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின்துறை மூலம் புதிதாக 832 மின்கம்பங்கள் அமைப்பது, 7 உயர்கோபுர மின் விளக்குகள் அமைப்பது, 17.3 கி.மீ. நீளத்தில் புதை மின் வடம் இடுவது மற்றும் 5,655 புதிய எல்.இ.டி. விளக்குகள் மாற்றும் பணி உள்ளிட்ட ரூ.10 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டிலான 60 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    மழைநீர் வடிகால்வாய் துறை மூலம் மழைநீர் வடிகால்வாய்கள் 19.53 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.19 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்துறை மூலம் ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில், 3 பள்ளிக் கட்டிடம், ஒரு நகர நல்வாழ்வு நிலையம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணிக்காக இயந்திரப் பொறியியல் துறை மூலம் ரூ.2 கோடியே 30 லட்சம் செலவில் 9 எண்ணிக்கையிலான கனரக காம்பாக்டர் வாகனங்களும், ரூ.91 லட்சம் செலவில் 6 எண்ணிக்கையிலான இலகு ரக காம்பாக்டர் வாகனங்களும் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

    கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சிப் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 663 மாணவ - மாணவியர்களுக்கு வண்ணச் சீருடைகளும், 5 ஆயிரத்து 254 மாணவ - மாணவியர்களுக்கு சைக்கிள்களும், 5 ஆயிரத்து 274 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.

    மாவட்ட குடும்ப நலத்துறை மூலம் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 786 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 1,418 பேருக்கு, ரூ.5 கோடியே 49 லட்சத்து 25 ஆயிரம் காசோலையாகவும் மற்றும் 5 ஆயிரத்து 672 கிராம் தங்க நாணயமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

    விதவை, முதியோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என ஆயிரக்கணக்கான பேருக்கு உதவித்தொகை கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி பெற்றுத்தரப்பட்டது. இது மட்டுமல்லாது குடிசைமாற்று வாரியம், வீட்டுவசதி வாரியம் போன்ற அரசின் பல்வேறு துறைகளின் மூலம் ஏராளமான நலத்திட்டப் பணிகள், அபிவிருத்தி பணிகள் போன்றவைகள் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அனைத்து மனுக்களின் மீதும் நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு சைதை துரைசாமி கூறியுள்ளார். #ADMK #SaidaiDuraisamy #KolathurConstituency
    ஆயிரம்விளக்கு தொகுதியை விட்டு கொளத்தூர் தொகுதிக்கு மாறிவந்தது ஏன்? என்பதற்கு மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். #DMK #MKStalin #KolathurConstituency
    சென்னை:

    தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது தொகுதியான கொளத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அங்கு நடந்த மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    சட்டமன்ற உறுப்பினராக இருந்து நான் சார்ந்திருக்கக்கூடிய என்னுடைய இயக்கத்துக்கு என்ன பெருமை தேடித் தந்திருக்கிறேனோ அதைவிட பன்மடங்கு பெருமையை இந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு தேடித்தர வேண்டும். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு என்னுடையப் பணி இருந்திட வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கக் கூடியவன்.

    இந்தப் பணியை நான் முடிந்த வரையில் நிறைவேற்றி தந்திருக்கிறேன் என்பதை நீங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

    நான் ஆயிரம்விளக்கு தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கே பணியாற்றி இருக்கிறேன். கடந்த முறை தொகுதி மாறி இந்தத் தொகுதிக்கு வர வேண்டும் என்று விரும்பினேன். மறைந்த தலைவர் கருணாநிதி, என்னிடத்தில் இது பற்றி காரணம் கேட்டதுண்டு.

    நான் ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து பல பணிகளை நிறைவேற்றி முடித்திருக்கிறேன். கொளத்தூர் சட்டமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதிக்கு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற உணர்வோடு நான் தொகுதி மாறி செல்லுகிறேன் என பெருமையோடு அவரிடம் சொன்னதுண்டு.

    நான் கட்சியிலே ஒரு மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிற காரணத்தால் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுண்டு. அப்படி வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு வருகிறபோதெல்லாம் முதல் பணியாக நம்முடைய தொகுதிக்கு தான் தொடர்ந்து வரக்கூடிய வழக்கத்தை வைத்துக்கொண்டு இருக்கிறேன்.

    அறிவாலயத்தில் பணி இருக்கிறது. கட்சியிலே பொறுப்பில் இருக்கக்கூடிய காரணத்தால் அந்தப் பணிகளும் இருக்கிறது. பல பணிகள் இருந்தாலும் அந்த பணிகளுக்கு இடையில் 5 நிமிடமோ அல்லது 10 நிமிடமோ இல்லை, ஒரு அரை நாள் கிடைத்தால் போதும் உடனே கொளத்தூர் வந்து விடுவேன்.



    நான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு வருகிறபோது கொளத்தூரிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பிறகு அறிவாலயத்துக்குச் சென்று கருணாநிதியை சந்திப்பேன். ‘இப்பத்தான் வருகிறாயா?’ என்று அவர் கேட்பார். இல்லை கொளத்தூர் போய்விட்டு வந்தேன் என்று சொல்லுவேன்.

    ‘கொளத்தூரை விடவே மாட்டியா?’ என்று கேட்பார். என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பேன். தொடர்ந்து அங்குதான் எப்போதும் நிற்கப் போகிறாயா? என்று கேட்பார். நான் நிற்கிறேனோ, இல்லையோ நம்முடைய இயக்கம் தொடர்ந்து அங்கு வெற்றிபெற வேண்டும். அதற்காகத் தான் அவர்களை பார்க்கச் செல்கிறேன். அந்த நம்பிக்கை பெறக்கூடிய சூழ்நிலையில் தான் அப்பணியை நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன் என்று நான் அடிக்கடி எடுத்துச் சொல்வது உண்டு.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #MKStalin #KolathurConstituency
    ×