search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொளத்தூர் தொகுதியில் முஸ்லீம்களுக்கு ரமலான் நோன்பு அரிசி, துணிமணிகள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
    X

    கொளத்தூர் தொகுதியில் முஸ்லீம்களுக்கு ரமலான் நோன்பு அரிசி, துணிமணிகள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    • பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
    • மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், "உதவுதல் நம் முதல் கடமை" என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரிச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததுடன், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×