search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே மண் கடத்திய 2 டெம்போ பறிமுதல்
    X

    கோப்பு படம் 

    புதுக்கடை அருகே மண் கடத்திய 2 டெம்போ பறிமுதல்

    • அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாமல் களிமண் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடத்தியவர்கள் போலிசை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே ஓச்சவிளை பகுதியில் இருந்து அனுமதியின்றி களிமண் கடத்துவதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிறப்புக்காவல் ஆய்வாளர் ரெத்தினதாஸ் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது இரண்டு டெம்போக்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவற்றில் அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாமல் இரண்டு டன் வீதம் 4 டன் களிமண் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தியவர்கள் போலிசை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.

    போலீசார் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

    Next Story
    ×