என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் சென்றவர்களை கொட்டிய தேனீக்கள்
    X

    சாலையில் சென்றவர்களை கொட்டிய தேனீக்கள்

    • சாலையில் சென்றவர்களை கொட்டிய தேனீக்களால் பரபரப்பு
    • கூட்டை அழிப்பதற்கு பொதுமக்கள் கோரிக்கை

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் பால் பண்ணை அருகில் அமைந்துள்ள ஒரு புளிய மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இந்த நிலையில் அந்தப் பாதை வழியாக சென்று கொண்டிருந்த ஜலாவுதின், மாதசாகிப், இளவரசு, கந்தசாமி, செல்லக்கண்ணு கணவர் பெயர் அம்மாசி, பிரபாகரன் மற்றும் சிலரை தேனீகள் சுற்றி வலளத்து கொட்டின. இதனால் உடல்வலி, மயக்கும் ஏற்பட்டதால் அவர்களை அங்குள்ள மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் தேனீ கூட்டை அழிப்பதற்கு தீயணைப்பு நிலையம் அலுவலரிடம் வயலூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×