என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் பிணம்"

    • அடையாளம் தெரியாமல் திணறல்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர்-திருத்தணி ரெயில் நிலையத்திற்கு இடையே திருப்பதி ரெயில் மார்க்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணம் கிடப்பதாக அரக்கோ ணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்ற உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோ ணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் - சித்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே காட்பாடி ரெயில் மார்க்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ் பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பிணத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • இறந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை மதுரவாயல் கங்கையம்மன் கோவில் தெருவில் இன்று காலை சாலையோரம் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அங்கு சென்ற போலீசார் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற போது தவறி விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர், கடந்த 24-ந்தேதி மாடுகளை ஓட்டிக்கொண்டு நிலத்திற்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை ஆற்காட்டை அடுத்த தாழனூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பிரபு பிணமாக கிடப்பதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கிடந்தார்.
    • வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்பு ரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் பகுதியில் முத்துக்கு மாரசாமி கோவில் பின்பு றத்தில் குளம் உள்ளது. இக்குளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், ,பேரில் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் இறந்து கிடந்த உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் குளத்தில் இறந்த உடலை மீட்பதற்காக கடலூர் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாகு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்பு ரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்   

    கடலூர் முதுநகர் போலீசார் விசார ணையில்,கடலூர் முதுநகர் நாராயணன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் கலைமணி (வயது 23). கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கலைமணி, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மேலும் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரை காணவில்லை என வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இன்று அதிகாலை அவர் வீட்டின் அருகில் உள்ள முத்துக்குமாரசாமி கோயில் பின்புறம் உள்ள குளத்தில் கலைமணி பிணமாக இருந்தது தெரிய வந்தது.     இந்த நிலையில் இறந்த கலைமணி 3 நாட்களுக்கு முன்பு வெளியில் சென்றவர் எப்படி குளத்தில் இறந்த நிலையில் கிடந்தார்? கொலையா? அல்லது தற்கொலையா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடலூர் முதுநகரில் கோவில் அருகே குளத்தில் வாலிபர் பணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் விசாரணை
    • யார்? என்று அடையாளம் தெரியவில்லை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பின்புறம் இருந்த கழிவு நீர் குட்டையில் ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கிடப்பதாக கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவுநீர் குட்டையில் இறந்து கடந்த பிணத்தை வெளியே எடுத்து பார்த்தபோது பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இறந்து கிடந்தவருக்கு சுமார் 37 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.

    பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதே குட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது உடைய வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இன்றுவரை அடையாளம் காணப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போத இரண்டாவதாக ஒரு வாலிபர் அதே குட்டையில் இறந்து கிடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன.

    இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் இறந்த நபர் முன்விரோதம் காரணத்தால் யாராவது அடித்து கொலை செய்துவிட்டு இங்கு போட்டு விட்டு சென்று உள்ளார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    கடந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 2 பேர் மர்மமான முறையில் இறந்த கிடப்பது சந்தேகத்தி ற்குரியதாக உள்ளது. இதனை போலீசார் உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து இங்கு வந்து இரவு நேரங்களில் லாரியில் வந்து ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு தங்கி விடுகின்றனர். இப்பகுதியில் பலமுறை கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளன.

    இதனைத் தொடர்ந்து தற்போது மர்மமான முறையில் வாலிபர்கள் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • வாய்க்காலில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல்
    • திருமலையின் உடல் பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்க ப்பட்டது

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பழமங்கலம் வடுகனூர் தொட்டியன் குட்டை வாய்க்காலில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்ட னர்,

    விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமலையனூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் திருமலை (வயது 29) வாய்க்காலில் பிணமாக மிதந்தது தெரியவந்தது, இவர் எழுமாத்தூர் அருகே அய்ய கவுண்டம்பா ளையத்திற்கு வந்து தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு திரு மலையை காணவில்லை. இதையடுத்து திருமலையின் தந்தை லட்சுமணன் அவரை தேடி வந்தார் அப்போது திருமலை அய்யகவுண்டம் பாளையம் வாய்க்கால் ஓரத்தில் படுத்திருந்ததாகவும் அப்போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து திருமலையின் உடல் பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்க ப்பட்டது.

    இத குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • விருதுநகரை சேர்ந்த என்ஜினீயர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலை மலை மீது நேற்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மேல்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் விருதுநகரை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி பால்பாண்டி (வயது 23) என தெரிய வந்தது. பால்பாண்டி விருதுநகரில் இருந்து வள்ளி மலைக்கு ஏன் வந்தார்.

    இரவு நேரத்தில் மலை மீது சென்றது ஏன்? யாராவது பால்பாண்டியை மலை மீது இருந்து தள்ளி கொலை செய்தார்களா? வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மாலை தட்டப்பாறை ரோட்டில் கருக் ஊரணி அருகில் உள்ள காற்றாலை சாலையில் சதீஷ் பிணமாக கிடந்துள்ளார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள கம்பவுண்ட் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    சதீசுக்கு மது பழக்கம் இருந்ததாகவும், இதன் காரணமாக அவரது மனைவி, குழந்தைகளும் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை தட்டப்பாறை ரோட்டில் கருக் ஊரணி அருகில் உள்ள காற்றாலை சாலையில் சதீஷ் பிணமாக கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் உயிரிழந்த சதீஷின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

    • வாலிபரின் இடது கையில் கைக்கடிகாரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது
    • உடல் ஆற்றில் விழுந்து 2 நாட்கள் ஆன நிலையில் காணப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே சுருளோடு வெட்டி திருத்தி கோணம் பகுதியில் பேச்சிப்பாறையில் இருந்து தோவாளை செல்லும் சானலில் நேற்று மதியம் சுமார் 40 வயது மதிக்கத் தக்க வாலிபரின் உடல் தண்ணீரில் மிதந்துவந்து கொண்டு இருந்தது. சானலில் குளித்து கொண்டிருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் சுருளோடு ஊராட்சி மன்ற தலைவர் விமலா சுரேஷுக்கு தகவல் கொடுத்தனர். அவர் குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தார். அதன்பே ரில் குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பா லமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி ணனர்.

    வாலிபரின் இடது கையில் கைக்கடிகாரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது மேலும் பேண்ட் சட்டை அணிந்திருந்தார். அதிலிருந்து எந்த ஒரு அடையாளமும் கண்டு பிடிக்க முடிய வில்லை.

    வாலிபரின் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. உடல் ஆற்றில் விழுந்து 2 நாட்கள் ஆன நிலையில் காணப்பட்டது. போலீசார் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது போலீசார் பல்வேறு கோணங்களில் அந்த வாலிபரை பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் உள்ள காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை செய்து வருகிறார்கள். பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகுதான் இவர் எப்படி இறந்தார் என்று தெரியவரும். மேலும் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

    • வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தார்.
    • போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்ட மலை பட்டியை சேர்ந்த வர் ராமன் (வயது 25). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் உடலுடன் கல்லை க்கட்டி வைத்திருந்த தால் தானாக கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்தாரா? அல்லது யாரேனும் கல்லை க்கட்டி கிண ற்றில் தூக்கி எறிந்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இறந்து போன ராமனுக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.

    • வீட்டின் அருகே உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது28). இவர் வீட்டின் அருகே உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பாலாஜி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×